ஆஃப்கான் ஏர்போர்ட்டில் அமெரிக்க விமானங்களை தடுத்த இந்தியா!?
இந்திய பிரதமர் மோடியை கொல்ல சீனாவில் டீஃப் ஷிட் ஆஃப் அமெரிக்கா திட்டமிட்டதையும், அதை பங்க்ளாதேஷில் இருந்து எக்ஸிகியூட் செய்ய திட்டமிட்ட அமெரிக்க CIA வின் அதிகாரியை ரஷ்யாவின் உளவமைப்பு இந்திய உளவமைப்புடன் சேர்ந்து கொன்று முறியடித்ததையும், அதுபற்றி புடின் சீனாவில் தனது காரில் தனியாக அழைத்து விவரித்ததாக வரும் செய்திகளை சென்ற பதிவிலும், மோடியின் பேச்சிலும் கோடிட்டு அதை உறுதிபடுத்தினார்.
அதற்கு காரணம் என்ன? ஏன் திடீரென ஆஃப்கன் மீது பாகிஸ்தான் ராணுவ படைகள் தாக்கியது? அதன் பிண்ணனி மிக சுவராசியமானது மட்டுமல்ல, ஆச்சரியமானதும், மூன்றாம் உலகப்போரை நோக்கிச்செல்லும் அபாயமானதும் கூட.
ஆஃப்கானில் உள்ள பாக்ராம் ஏர்போர்ட்டை உறுவாக்கியது ரஷ்யா. பின்பு அதை நவீனப்படுத்தி பயன்படுத்தியது அமெரிக்கா. ஆனால் அமெரிக்கா வெளியேறும்போது அதை பயன்படுத்தாத அளவிற்கு சேதப்படுத்திவிட்டு சென்றது.
அதை யாரும் மீண்டும் செப்பனிட முடியாது என்ற அமெரிக்கா எதிர்பார்த்த நிலையில், சமீப காலத்தில் ஏற்பட்ட இந்தியா-ஆஃப்கன் புதிய நெருக்கம் மூலம், அதை இந்தியா விமானப்படை சீர்படுத்தியது. அதில் இந்தியாவின் மிகப்பெரிய ட்ரான்ஸ்போர்ட் விமானம் மூலம் மேலும் நவீன கருவிகள், ரேடார்கள், டேங்குகள் மற்றும் சுகோய் ரக விமானங்களை அங்கே நிறுத்தியது.
அது அமெரிக்காவிற்கு பெரிய எரிச்சலை கொடுத்தது. காரணம் அங்கே இருக்கும் ஏராளமான ரேர் எர்த் மினரல்கள் இந்தியா வசம் போகக்கூடும் என்பதாலும், ஸ்டேட்டர்ஜிகல் பாய்ண்ட் கைவிட்டு போவதாலும். அதனால், அதை கட்டமைத்தது அமெரிக்காதான், அதனால் மீண்டும் பக்ராம் ஏர்போர்ட்டை அமெரிக்காவிற்கு கொடுக்க வேண்டும் என்று ட்ரம்ப் கேட்டார்.
அதை கொடுக்க மறுத்தது ஆஃப்கன் அரசு. அத்தோடு நிற்கவில்லை அதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்தது.
இது பெரிய எரிச்சலை மட்டுமல்ல, அவமானமாக உணர்ந்தது வல்லரசு அமெரிக்கா. அதனால் அமெரிக்க விமானங்கள் அங்கே பறந்து போய் இறங்க அனுமதி கோர, அதை இந்தியாவின் ரேடார்கள் மூலம் கண்கானித்த ஏர்போர்ட் நிர்வாகம், ஆஃப்கன் அரசின் உடன்பாட்டுடன் அந்த விமானங்கள் தரை இறங்கவோ, பறக்கவோ அனுமதி மறுக்கப்பட்டது. இது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய அவமானமாக ட்ரம்பால் உணரப்பட்டது.
ஆஃப்கானில் எற்கனவே அடிபட்ட அமெரிக்கா இன்றைய சூழலில் மோசமான பொருளாதார நிலையில் அதனோடு போர் தொடுக்கவும் முடியவில்லை, ஒத்துப்போகவும் முடியவில்லை. அதன் விளைவாக அமெரிக்கா பாகிஸ்தான் மூலம் ஆஃப்கன் மீது விமானம் மூலம் தாக்கி போர் தொடுத்தது.
அதனால் கோபமுற்ற தலிபான்கள் கொடூரமாக திரும்ப தாக்கி, பாகிஸ்தான் எல்லையில் இருந்த படைவீரர்களை கொன்று குவித்து, பலரை சிறைபிடித்து, அவர்கள் பேண்டுகளை அவிழ்த்து, இந்தியா 1971 ஆண்டு பங்க்ளாதேஷில் செய்ததுபோல செய்து, 93000 பேர் சரணடைந்தது போல மீண்டும் செய்வோம் என்று எச்சரித்து அதை ட்வீட் செய்தது.
அந்த தாக்குதலில் பல பாகிஸ்தான் எல்லைச் சாவடிகளை நாசமாக்கி, ஆயுதங்களை கைப்பற்றி, 320 பாகிஸ்தான் ராணுவ வீரர்ககளுக்கு மேல் கொன்று. சிலரை சிறைபிடித்து அதன் வீ(கோ)ரத்தை காட்டியது. அதன் விளைவாக பாகிஸ்தான் சவூதி, குவைத் என்றவர்கள் காலில் பாகிஸ்தான் விழுந்து போர் நிறுத்தம் கோருமளவிற்கு சென்றுவிட்டது. அந்த போர் நிறுத்தத்தின் பின்னாலும் அமெரிக்காதான் இருந்தது என்பதை உலகறியும்.
இந்த சூழலில் ஆஃப்கன் பின்னால் இந்தியா இருப்பதும், அதன் ஏர்போர்ட்கள் இந்தியா வசமாவதை தடுக்கவும் அமெரிக்காவால் முடியாததால், பாகிஸ்தான் மூலம் இந்திய எல்லையான சர் கிரீக் பகுதியில் படைகளை குவித்தது பாகிஸ்தான். அதுமட்டுமல்ல எங்களிடம் அணு ஆயுதம் உள்ளது, ஆஃப்கன், இந்தியா இரண்டையும் ஒரு சேர சமாளிப்போம் என்று எச்சரித்தது.
இந்தியா அதற்கு பதிலடி தர முப்படைகள் இணைந்து நடுத்தும் முழு அளவிலான ஒரு போர் ஒத்திகையை மீண்டும் நடத்துவதாக அறிவித்து, அதை இப்போது சர் கிரீக் அருகில் செய்கிறது. சென்ற முறை ஆபரேஷன் சிந்தூரின் போது இவ்வாறு போர் ஒத்திகையை அறிவித்த பின்னர்தான் இந்தியா தாக்கியது என்பதால் இப்போதும் இந்தியா தாக்குமோ என்று பாகிஸ்தான் பயந்து அலறிக்கொண்டுள்ளது.
இப்போது அமெரிக்கா டாம்ஹாக் உற்பட நவீன ஆயுதங்களை அவசர அவசரமாக பாகிஸ்தானுக்கு கொடுக்கும் வேலையில் இறங்கியுள்ளது. இதை தடுக்க வேண்டுமெனில் அமெரிக்காவால் நேரடியாக போரில் இறங்க முடியாது, பாகிஸ்தான் போன்ற அடிமைகள் மூலம்தான் அதை மறைமுகமாக செய்ய முடியும்.
இந்த நிலையில் அமெரிக்க நவீன போர் விமானங்கள் குறித்த சில செய்திகள் வெளிவருகிறது அது அமெரிக்காவின் அசைக்க முடியாத டெக்னாலஜி ஆதிக்கத்தின் வீழ்ச்சியை மேலும் காட்டுகிறது.
இங்கிலாந்தின் F-35 போர் விமானம் அரபிக் கடலில் பறந்து இந்தியாவின் பகுதிகளை உளவு பார்த்தபோது, அவசர நிலை ஏற்பட்டு கொச்சியில் தரை இறங்கி அதை பழுது பார்க்க முடியாமல் வாரக்கணக்கில் முயன்றும் முடியாமல் போனது பற்றிய செய்திகள் கொஞ்சம் இப்போது கசிந்து வெளிவருகிறது.
அதில் இந்தியாவின் ரேடார்கள் F-35 விமானத்தை இனம்கண்டு, லேசர் வகை ஆயுதத்தால் அதை தாக்கியது மட்டுமல்ல, அதன் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்துவிட்டதாக வரும் செய்திகள் அமெரிக்காவை கடும் கோபத்தில் ஆழ்த்திவிட்டது.
அது மட்டுமல்ல சமீபத்தில் அமெரிக்க கப்பற்படையின் விமானங்கள் கட்டுப்பாட்டை இழந்து கடலில் வீழ்வது தொடர்ந்து நடப்பதாக வரும் செய்திகள், இந்தியா அமெரிக்காவை விஞ்சிய அளவில் அதன் டெக்னாலஜி வளர்ந்துவிட்டதாக சந்தேகிக்கிறது, பயப்படுகிறது.
அதுமட்டுமல்ல, இந்தியா தற்போது ஏவுகணை சோதனை செய்ய வங்காள விரிகுடாவில் நோட்டம் அறிவித்தது. இதுவரை சீன உளவு கப்பல்களே அதை வேவு பார்க்கும். ஆனால் இந்த முறை அமெரிக்காவின் உளவு கப்பலும் வேவு பார்க்க அனுப்பியதில் இருந்து, அது இந்தியாவை பற்றி எவ்வளவு பயப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.
அதன் காரணமாக இந்தியாவை தடுக்க வேண்டுமெனில் எல்லாவற்றிற்கும் மூலகாரணமான மோடியை கொல்வது ஒன்றே வழி என்றளவில் அது எந்த எல்லைக்கும் செல்லும் அளவிற்கு கீழே இறங்கிவிட்டது டீஃப் ஸ்டேட் ஆஃப் அமெரிக்கா. அதன் பிண்ணனிதான் சீனாவில் மோடியை கொல்ல நடந்த சதி. அது மலேஷியாவிலும் நடக்கலாம் என்று மோடியை புடின் அரசு எச்சரித்தது.
அதன் காரணமாக, மோடி மலேஷியாவில் நடக்கவிருந்த ASEAN கூட்டத்தில் கலந்துகொல்ல செல்வதை தவிர்த்துவிட்டார். அது இரண்டு வகையில் அவசியமானது, ஏனென்றால் நாளை ட்ரம்ப் பல பொய்களை மோடி தன்னிடம் சொன்னதாக சொல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பதும் இன்னொரு காரணம்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அமெரிக்காவின் கொத்தடிமையாக மாறுவதால் கடும் கடுப்பில் இருக்கும் ஈரான், பாகிஸ்தான் எல்லையில் டென்ஷன் உறுவாக்கி வருகிறது. அதே சமயம் பலூசிஸ்தான் போராட்டம் மூலம் ஆறுக்கு மேற்பட்ட மாவட்டங்கள் அவர்கள் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.
டெரிக்கி டலிபான்கள வடமேற்கில் இருந்து தாக்குகிறார்கள். வடகிழக்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் அமளி. உள் நாட்டில் அரசுக்கு எதிரான புரட்சி என்று எல்லா திசைகளிலும் பாகிஸ்தான் கடும் நெருக்கடியை சந்திக்கிறது. சில அமைப்புகளை தீவிரவாத இயக்கம் என்று பாகிஸ்தான் தடைகூட செய்துள்ளது.
இந்த சூழலில் ஆஃப்கன் இந்தியா செய்ததுபோல குணால் நதியில் அணைகட்டி பாகிஸ்தானுக்கு தண்ணீர் தரமாட்டோம் என்று அதற்கான பணியை ஆரம்பித்துவிட்டது. அது வடமேற்கு பாகிஸ்தானில் மட்டுமல்ல, பஞ்சாபில் கூட பெரிய பிரச்சினையை விவசாயிகளுக்கு மட்டுமல்ல, கோடைகாலத்தில் குடி நீர் பிரச்சினையை கொண்டுவந்துவிடும் என்று பாகிஸ்தான் மீடியாக்கள் இப்போதே அலற ஆரம்பித்துவிட்டது.
அதாவது பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தை பாலைவனமாக்குவதை இந்தியா, ஆஃப்கன் இரண்டும் அடுத்த சில ஆண்டுகளில் செய்து முடிக்கும். அந்த பஞ்சாபிகள்தான் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த ஆட்சியை கட்டுக்குள் வைத்திருப்பதாக மற்ற அனவருக்கும் கடும் கோபம் இருப்பதை உலகறியும்.
அதனால் பாகிஸ்தான் இப்போது அமெரிக்கா சொல்வதை கேட்காவிட்டால் மோசமான நிதி நிலையில் இருக்கும் அதற்கான நிதி கிடைக்காது. கேட்டால் அதைச்சுற்றிலும் எதிரிகள் என்று இருதலைக்கொள்ளியாக தவிக்கிறது.
இந்த பக்ராம் விஷயத்தில் அமெரிக்கா அளவிற்கான பாதிப்பு சீனாவிற்கும் அதன் OBOR திட்டத்தில் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆனால் இந்தியாவிற்கும். அமெரிக்காவிற்கும் இடையே ஏற்படும் இந்த பனிப்போர், சீனாவின் வர்த்தகத்திற்கு அமெரிக்காவின் ஆதரவையும், இந்த பனிப்போரில், யார் தோற்றாலும் அதில் சீனாவின் ஒரு எதிரி ஒழிந்தான் என்ற நன்மையும் இருப்பதால், இந்தியாவின் பக்கம் இருப்பதுபோல சீனா நடிக்கிறது, பிரச்சினையை தூண்டிவிடவும், அதை தொடர்ந்து செய்யவும் வாய்ப்புண்டு.
இதனால் மோடியின் உயிருக்கு டீஃப் ஷிட் ஆஃப் அமெரிக்காவால் ஆபத்து தொடர்ந்து இருப்பதும், உள்ளூர் தேசவிரோதிகள் மூலம் மாணவர் போராட்டம் அல்லது SIR க்கு எதிரான போராட்டம் என்று வலுக்கக்கூடும். அப்போது இந்திய அரசுக்கு வீதிக்கு வந்து ஆதரவை கொடுக்க தயங்கக்கூடாது என்பதை தேசத்தை நேசிப்பவர்களிடம் விதைக்க வேண்டிய நேரமிது.
ஜோதிடர் ஷெல்வி மோடியின் உயிருக்கு 2026 முடியும்வரை ஆபத்து இருப்பதாக சென்ற ஆண்டு சொன்ன விஷயம் இப்போது கூடுதல் கவனத்தை பெறுகிறது.
எனவே தமிழகத்தில் இருக்கும் கருத்து வேற்றுமைகளை மறந்து, இந்தியா என்று ஒன்றினையுங்கள் தேசம் காக்க!
🐶
#விழிப்புணர்வு பதிவு💐 #பாரதப் பிரதமரின் ஆளுமை💐 #அரசியல் விழிப்புணர்வு💐 #சாதணை படைத்தவர்கள்💐 #இன்றைய உலகச் செய்திகள்...


