ShareChat
click to see wallet page
search
இரு இதயங்களையும் சங்கமிக்கும் நேரம் .... ஆதியின் செல்போன் திரையில் உள்ள பெயரைக் கண்டு ... வெகுண்டு எழுந்தவளோ .. கோபத்தில் அருகில் இருந்தவனை தள்ளிவிட .. எதுக்கு இப்படி அலையறீங்க ... சொல்லவே ஒரு மாதிரி ... என்று வார்த்தைகளை அள்ளிவிட ... இதற்கு மேலும் பொறுக்காதவனாய் அடுத்த நொடி அவள் சங்கு கழுத்தை பற்றிக் கொண்டு .... ஏய் ! ... இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா .... அப்புறம் என்ன மனுஷனாவே பார்க்க முடியாது ... சின்ன பொண்ணு பாக்குற ?? ... நடக்கிறதுக்கு நான் பொறுப்பாக மாட்டேன் ... அக்கா சாப்பிட கூப்பிட்டாங்க அதான் வந்தேன் .... இல்லனா உன்னோட மூஞ்ச கூட நான் பார்த்திருக்க மாட்டேன் ... எனக்குன்னு ஆள் இருக்கு ... என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு அங்கிருந்து ஆதியோ வேகமாக சென்று விட ... அப்போதுதான் கவனித்தால் ... மீண்டும் ஒளி திரையில் உள்ள பேரைக் கண்டு ... தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்க ... இவள நிம்மதியாக இருக்க விடமாட்டா போல ... மெசேஜ் பண்ண .... இப்போ ! கால் பண்றா .... பேர பாரு மீனு மோருன்னு அருகில் இருந்த செல்போனை தூர தூக்கி அடித்த சத்யவோ .. அதில் தானாகவே அட்டனாக ... ஆதி சார் ... எனது ஆதி சாரா ... எதுவும் சரி இல்லையே ... இருக்கீங்களா ?? ... நான் மீனு பேசுறேன் ... என்ன சார் சத்யாவை கூட்டிட்டு போனீங்க எதுக்கு ??? ... இவள என்னை எங்க கூட்டிட்டு போன இந்த நாய்க்கு என்ன ??? ... மூடிட்டு அவ வேலை பார்க்க வேண்டி தானே .. சார் இருக்கீங்களா ... எதுவும் பேச மாட்டேங்கறீங்க .... ஏதாவது பிரச்சனையா ... அப்புறம் சத்யா கிட்ட லவ் சொல்லிட்டீங்களா ??? .. என்று கேட்ட சத்யவுக்கோ தூக்கி வாரி போட்டது ... அப்போ இவ சொன்னது ??? ... என்ற யோசித்து கொண்டே இருக்கும் போதே ... சார் ... சார் என்ன பேசவே மாட்டாங்க ... இருக்கீங்களா ??? ... அதற்கு எந்த பதிலும் இல்லை அவளுக்கு ... அவள் எண்ணங்கள் எங்கெங்கோ உலர்ந்த கொண்டிருக்க ... சத்யா என்ற அழைப்பில் ... தன் நிலைக்கு வந்த அவளோ ... அம்மா கூப்பிடுறாங்க ... அதை விட்டுவிட்டு வேகமாக கீழே ஓடி வர ... ஏய் ! உன்ன எவ்வளவு நேரம் கூப்பிடுறது ??? ... சாப்பிடாம என்ன பண்ணிக்கிட்டு இருக்க ??? ... நல்லா தூங்கிட்டேன் மா ... ஆமா ! ... உன்னோட மாமா எங்க ??? .. உன்ன கூப்பிட வந்துட்டு எங்க போன ??? ... அதற்கு திரு திருவென்று முழித்த சத்யவோ .... எந்த பதிலும் சொல்லாமல் இருக்க .... அக்கா நான் இங்க இருக்கேன் ??? ... எங்கடா போன ??? ... ஆதி .... அர்ஜென்ட் ... ஓ ! சரி ... வந்து சாப்பிடு ... ம்ம் ... ரெண்டு பேரும் சாப்பிடுங்க ... இருடா அப்பளம் பொரிச்சு எடுத்துட்டு வரேன் ... ம்ம் ... என்று சொல்லிவிட்டு சாப்பாட்டு தட்டிலேயே கவனம் என்பது போல இருந்தாலும் ... ஆதியின் மனம் முழுக்க ... அவளின் அந்த வார்த்தைகளே நிறைந்திருக்க ... சத்யவோ அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் ... சிறிது நேரத்துக்கு முன்பு நடந்ததை நினைத்து பார்த்துக் கொண்டிருக்க ... அப்பொழுது தான் அவளுக்கு ஒன்னும் ஞாபகம் வந்தது ... அடுத்த நொடியே சாப்பாடு தட்டில் கை கழுவிட்டு ... தன் அறைக்கு மேலே சொல்ல. .. ஏய் ! எங்கடி போற சாப்பிடாம ... சத்யா ... அதை எங்கே காதில் வாங்கினால் ... சொல்ல சொல்ல கேக்காம மேல போய்ட்டா பாரு .. டேய் ! சாப்பிடாம என்ன பண்ணிக்கிட்டு இருக்க ??? .. டேய் ஆதி ... என்று அவன் தோலை போட்டு உலுக்கிய மாதவியோ ... ஆ ... அக்கா ... என்னடா ஆச்சு ??? ... ஆதி... அவன் இப்படி சொல்லுவான் ... அவர்கள் இருவருக்கும் நடந்த அந்தரங்கத்தை ... அடுத்த நொடியே ... ஒன்னும் இல்ல ... அக்கா எனக்கு போதும் .... என்று சாப்பாடு தட்டில் கை கழுவி விட்டு அங்கிருந்து சென்றுவிட ... டேய் ! என்னங்கடா இது ???? ... ஆளாளுக்கு சாப்பிடாம போறது ... நான் யாருக்கு சமைச்சேன் . . என்று மாதவி திரும்பும் போது ... அப்போது வீட்டுக்கு வந்த ருத்ரவோ ... அவன் சொல்லிய வார்த்தைகளில் இருந்து இன்னும் மீளாமல் இருக்க ... ருத்ரா நீயாவது வந்தியே ... பாருடி இங்க நடக்குற கூத்த ... ஒரு பயிலும் சாப்பிட மாட்டேங்குது .... அவங்க போறாங்க நம்ம ரெண்டு பேரும் சாப்பிடலாம் வா .... ருத்ரவும் அதைக் கண்டு கொள்ளாமல் உள்ளே செல்ல ... என்ன ஆச்சு இவளுக்கு ??? ... போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த மாதவியோ ... புருவத்தை உயர்த்த ... மகளின் இந்த மாற்றம் புதிதல்லவே ... எப்பொழுதும் பள்ளி சென்று உள்ளே வரும் பொழுது ஓடி வந்து தன் அன்னையை கட்டிக் கொள்பவள் ... இன்றோ புதுவிதமாக தெரிய ... அதில் பல முடிச்சுகள் விழ ... அதை அவிழ்க்க வழி இல்லாமல் மாதவிக்கு தலைவலி வந்தது தான் மிச்சம். ... இப்பவே கண்ண கட்டதே போங்கடா ... மேலே சென்ற சத்யவோ ... கீழே கிடந்த ஆதியின் செல்போனை எடுக்க ... அதில் ஏதாவது கிடைக்குமா என்று பார்க்க ... கேலரி என்று வேகமாக உள்ளே நுழைந்து அவளுக்கு கண்களில் தென்பட்டது அழகாக சிரித்துக் கொண்டு ஆதியின் தோள்களில் மாலையாக இருக்கும் சிறு வயது சத்யா தான் ... அதை கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்த அவளோ ... அடுத்து அவள் தலையில் இடி விழுந்தது போல கம்பீரமான தோரணையில் காக்கி உடையில் இருக்கும் ஆதியை தான் ... ஆதிரூபன் இன்ஸ்பெக்டர் என்று அதில் எழுதப்பட்டிருக்க ... அதை பார்த்த அவளோ கைகள் நடுங்க அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் உறைந்து இருக்க .. அப்படியே கையில் இருந்த போனை கீழே போட்டு விட்டால் ... பயத்தில் ... அடுத்த நொடி தன் பயத்தை போக்குவதற்காக குளியல் அறையில் புகுந்து விட ... சிறிது நேரத்தில் ... உள்ளே சென்ற ஆதியோ ... இன்று நடந்தது நினைத்து தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்க ... அவளின் அந்த வார்த்தை அவனால் தாங்கி கொள்ளவே முடியவில்லை ... அதை எல்லாம் மறந்து கண்கள் மூடும் சமயத்தில் ... அப்பொழுது தான் ஒன்றை கவனித்தான் ... என்னோட போன் எங்க ??? ... எங்க வெச்ச ... கடவுளே அதுல முக்கியமான பைல் எல்லாம் இருக்கு ... ரொம்ப அஃபிஸ்னல் .. என்று ஒவ்வொரு இடம் இல்லாமல் தேடிக் கொண்டிருக்க ... ஒருவேளை அங்க ??? .... இப்ப போன மறுபடியும் அலையறீங்களா கேட்பா ??? ... எப்ப அந்த சைடே போக கூடாது ... என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் .. காலேஜில் இருந்து வரும்போது அவனுக்காக அவள் கண்ணீர் அதை பறை சாய்க்க ... அடுத்த நொடியை அங்கே பறந்து விட்டான் இமை பொழுதில் ... உள்ளே சென்ற அவனுக்கோ அங்கே சில்லு சில்லாக நொறுங்கி கிடக்கும் செல்போனை பார்த்த அவனுக்கோ அதிர்ச்சியில் கண்கள் விரிய ... ஒரு நிமிடம் பார்த்தவன் அது யாருடைய வேலை என்று புரிய ... சத்யா என்ற ஒரு குரல் மட்டுமே ... அதில் நடுங்கிய சத்யவோ உள்ளே இருந்து ... ( அவனின் குரலை அவன் எவ்வளவு கோபத்தில் இருக்கிறான் என்பதில் உண்மையை சொல்லும் ... ) இருந்தாலும் தான் எப்படி இருக்கிறோம் என்று மறந்து வெளியே வந்த அவளோ ... அதுவும் ஈரம் சொட்ட சொட்ட ... இருப்பவளை ஒரு நிமிடம் பார்த்தவன் அடுத்த நிமிடமே அதில் உடல் நடுங்கி இருக்கும் சத்யாவை கண்ட ஆதிக்கோ தான் செய்த மடத்தனம் புரிய ... சாரி டி சொல்லி இருக்கலாம் இல்ல ... நீ முதல்ல போ உள்ள போடி ... ஆனால் ! அவளோ அசையாமல் இருக்க ... ஏய் ! என்னம்மா ஆச்சு ??? ... என்று தன் பதட்டத்தை விடுத்து அருகில் ஓடி வர ... அதே சமயம் உடல் நடுக்கத்தில் அப்படியே அவன் மேலே மயங்கி விழுந்து விட ... ஏய் ! சத்யா ... சத்யா ... என்று சொல்லி கொண்டே இருக்கும் போது ... அவள் உடல் சூடுவதை கண்டு .. இவ்வளவு நேரம் தண்ணில இருந்தது இல்ல ஜுரம் வந்துடுச்சு நினைக்கிறேன் .... சரி முதல்ல டிரஸ் மாத்தணும் அவளுக்கு ... சரி அக்காவை கூப்பிடலாம் முதல்ல ... அக்கா அக்கா என்று கூப்பிட்டு பார்த்தும் பலன் இல்லை ... அவள் அப்போதே தூங்கிவிட்டாலே ... அப்போ ! ருத்ரா வந்து இருப்ப இல்ல ... ருத்ரா ... ருத்ரா ... மீண்டும் ருத்ரவை அழைக்க ... அவளிடம் எந்த பலனும் இல்லை ... என்னாச்சு யாரும் வர மாட்டாங்க ??? ... இப்படியே இருந்தா ஜுரம் வந்துருமே ... அடுத்த நிமிடமே அவன் தயக்கத்தை விடுத்து ... கணவனாகவே அவளின் மேல் உரிமையைப் பதிக்க ... மெல்ல அவள் ஈர ஆடைகளுக்கு விடுதலை கொடுத்த அவனோ ... அவன் பார்வையில் இதுவரை குழந்தையாகவும் குமரி ஆகவும் தெரிந்தவள் .... இன்றோ ! அவன் உரிமையாக தெரிய ... அதே உரிமையோடு அவளுக்கு ஆடைகளை அணிவித்தவன் ... அவளை ஒழுங்காக படுக்க வைத்து விட்டு வெளியே வந்த அவனோ ... தன் அறைக்கு சொல்ல ... ஆதியின் இன்னொரு செல்போன் அடிப்பதை கண்டு ... இந்த போன் யார் பண்றா அதுவும் இந்த நேரத்துல ... இது நான் கிஷோருக்கு மட்டும் தான் கொடுத்தேன் ... ஆனா இது அவன் நம்பர் இல்லையே .... என்று ஒருவித யோசனையோடு அதை அட்டென்ட் செய்து காதில் வைத்த அவனோ ... ஹலோ ... சார் ... சார் ... யாரு ??? ... யாரு ??? ... ஹலோ நான் கிஷோர் பேசுறேன் .. நான் உயிரோடு இருப்பேனு தெரியல. ... ஏய் ! இப்போ எங்க இருந்து பேசுற ??? ... உங்கள பாக்க தான் தஞ்சாவூர் வந்த .... அங்க வந்த போ தான் தெரிஞ்சது .... அவன் ஜெயில்ல இருந்து தப்பிச்சுட்டான்னு ... அது எனக்கு தெரியும் கிஷோர் ... நீ எப்படி இங்க ??? ... உங்ககிட்ட உண்மையை சொல்ல வந்துகிட்டே இருக்கேன் ... ஆனா ! அதுக்குள்ள என்ன தொரத்த ஆரம்பிச்சிட்டாங்க ... ஏய் ! எங்க இருக்க ??? ... சார் இனிமே என்ன தேட வேண்டாம் ... நீங்க ஜாக்கிரதையா இருங்க ... இந்த போன் என்னோடது கிடையாது பக்கத்துல இருந்து வாங்கி பேசுறேன் .. அவங்க என்ன நெருங்கிட்டாங்க ... நீங்க ஜாக்கிரதையா இருந்துக்கோங்க ... என்று கிஷோர் வைத்து விட .... கிஷோர் .... கிஷோர் ... அவன் பேசுவத பார்த்த ... ஐயோ கடவுளே அடித்து பிடித்து வீட்டை விட்டு வெளியே சென்ற அவனோ ... என்றும் இல்லாத திருநாளாக ... பைக்கை ஸ்டார்ட் செய்ய ... அந்த தெரு முனையை தாண்டிய மறு நிமிடமே .... சார் .... சார் ... நீங்க சொன்ன மாதிரி ஆள் வந்துட்டாங்க ... சீக்கிரம் அடிச்சு தூக்கு ... அடுத்த நிமிடமே அவன் எதிர்பார்க்காத நேரத்தில் எதிரே வரும் கண்டெய்னர் லாரி அவன் மேல் வேகமாக வந்து மோதிட ... கண்ணிமைக்கும் நேரத்தில் இது நடந்திருக்க ... அதில் நிலை தடுமாறி விழுந்த ஆதியோ .... அங்கே அருகில் இருக்கும் கல்லின் மீது மோதி ரத்த வெள்ளத்துடன் கிடக்க ... அதேசமயம் தூக்கத்தில் அலறி துடித்து எழுந்த சத்யவோ .. முதல் முறை தன் தாலியை இறுக்கப் பற்றிக் கொள்ள ... ஒருவித படபடப்புடன் அவள் முகத்திலும் வேர்வை துளிகள் அரும்ப .... அதில் கண்களை திறக்க மூடிய நிலையிலும் கூட அவன் நினைவே அவனுக்கு தோன்ற ... அடுத்த நிமிடமே மாமா. .... அங்கே மெல்ல ... மெல்ல .... கண்கள் மூடும் வேளையிலும் கூட சத்யா .... சத்யா என்று மட்டுமே அவன் நினைவில் ... அவன் உயிரான அவளின் பிம்பம் தோன்றி மறைய ... அப்படியே ... பிழைப்பானா ஆதி ??? .. சத்யாவின் நிலைமைதான் என்ன ??? ... சதியிலிருந்து தப்பிப்பார்களா ??? ... காத்திருங்கள் அடுத்த பதிவில் ??? ... கோகுலத்து கண்ணா கண்ணா சீதை இவள் தானா ❣️ ❣️ ❣️ தொடரும் "கோகுலத்து கண்ணா கண்ணா சீதை இவள் தானா ❣️❣️❣️", - பிரதிலிபியில் படிக்க :, https://tamil.pratilipi.com/series/ #pratilipi stories #pratilipi page social #pratilipi #ebooks pratilipi #pratilipi கதைகள் உலகம் கோகுலத்து-கண்ணா-கண்ணா-சீதை-இவள்-தானா-nuo55wadyegx?language=TAMIL&utm_source=android&utm_medium=content_series_share இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்
pratilipi stories - ShareChat