ShareChat
click to see wallet page
search
#என்றும் mgr இளைய தலைமுறையே! பொன்மனச் செம்மலை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு தலைவர் போல நம்மால் ஆக முடியாது குறைந்த பட்சம் அவர் பாதையில் நாம் செல்வோம் நாடும் வீடும் நலமாய் விளங்கும் மதுரையை சார்ந்த #முத்தழகு என்ற வயதான தாய் ஒருவர் வாழ வழியின்றி, தலைவரை காண சென்னை வருகிறார்... அப்படி வந்த அந்த தாயின் கையில் மதுரை லாலா மிட்டாய் கடை பூந்தி பொட்டலம் வேறு.. சென்னையில் தலைவரை பற்றி விசாரிக்கும் போது தலைவர் 'புதிய பூமி' பட ஷூட்டிங்கில் இருப்பதை அறிந்து நேரே தலைவர் இருக்கும் இடத்திற்கே சென்று விடுகிறார்.. "நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை- நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை" -என்ற பாட்டு சீனுக்காக தலைவர் தயாராகிக்கொண்டு இருந்த போது, தாய் முத்தழகு வந்த தகவல் தலைவரிடம் சொல்லப்படுகிறது. தலைவர் உடனே அவரை அழைத்து நலம் விசாரிக்க, அந்த வயதான தாயோ தலைவரை பார்த்த ஆனந்ததில் வழிந்தோடிய கண்ணீரை துடைத்துக் கொண்டு தன்னைப்பற்றிய விவரத்தை கூறி.. 'மகனே உனக்காக நான் மதுரை பூந்தி வாங்கி வந்திருக்கேன். சாப்பிடு ராசா' -என்று தனது முந்தானையில் முடித்து வைத்திருந்த பொட்டலத்தை பிரித்து தலைவருக்கு ஊட்டி விட.. தனக்கென்ன எதுவுமில்லாத நிலையிலும், எனக்காக அன்போடு ஒரு பூந்தி பொட்டலத்தை வாங்கி வந்த தாயாரை கண்டு மனம் நெகிழ்ந்து விட்டார். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. தலைவர் இயக்குனரின் காதில் ஏதோ ரகசியமாக ஒன்றை கூற.. அந்த தாய் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவழைக்கப்பட்டார்.... 'எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே என்னை ஆளும்..' -என்ற பாடல் வரிகள் வரும் இடத்தில், தலைவர் லாவகமாக திரும்பி சரியான டைமிங்கில் அந்த தாய் முத்தழகுவை கட்டி அணைக்கும் காட்சி அப்போது படமாக்கப்பட்டது. அதற்கு பிறகு அந்த தாய்க்கு தேவையான அனைத்து வாழ்வாதார உதவிகளையும் தலைவர் செய்து கொடுத்தார்.. அந்த அம்மையார் தனது கடைசி மூச்சுள்ளவரை பசியில்லா உணவும் இருக்க ஒரு வீடும் தலைவர் ஏற்பாடு செய்துகொடுத்தார்.... தனது அன்பை எப்படி விளம்பரம் இல்லாமல் தலைவர் செய்துள்ளார் பாருங்கள் அருமை நண்பர்களே..... அந்த தாய் முத்தழகை கட்டியணைக்கும் அந்த அருமையான காட்சிதான் இந்த வீடியோ.. நன்றி:திரு.சிவகுமார்
என்றும் mgr - ShareChat