ShareChat
click to see wallet page
search
*தேவீ நாராயணீயம்* *தசகம்-3* புதிய தொடர் பதிவு! 41 தசகங்களை கொண்ட இந்த தேவி நாராயணீயம் பலேலி நாராயணன் நம்பூதிரியால் இயற்றப்பட்டது. நாராயணீயம், ஸ்ரீமத் பாகவத கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது போல, இது தேவி பாகவதத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. *மஹகாளி அவதாரம்* 7)நுதிப்ரஸன்னா ப்ஜபவஸ்ய தூர்ணம் நி: ஸ்ருத்ய விஷ்ணோ: ஸகலாம் கதஸ்வம் திவி ஸ்திதா; தத்க்ஷணமேவ தேவோ நித்ராவிமுக்தோ ஹரிருத்திதோ பூது பொருள்: அப்பொழுது விஷ்ணுவின் உடலிலிருந்து அம்பிகையின் அருளால் ஒளிமயமான தாமஸ ரூபமான சக்தி வெளிப்பட்டது. ஆகாசத்தில் சுந்தரி ஆக, தமோகுண தேவியாக காளி அவதரித்தாள். அந்த சக்தி வெளி வந்ததும் விஷ்ணு தன் உடலை லேசாக அசைத்தார். ப்ரம்மன் ஆனந்தம் அடைந்தார். 8)அதைஷ பீதம் மதுகைட பாப்யாம் விரிஞ்சமாலோக்ய ஹரிர் ஜகாத அலம்பயேனா, ஹமிமௌ ஸுராரீ ஹந்தாஸ்மி சீக்ரம் ஸமரே த்ர பச்ய பொருள்: கண் விழித்த விஷ்ணு "ப்ரம்மனே! நீ ஏன் இங்கு தாமரை மலரை விட்டு வந்தாய்? ஏன் பயப்படுகிறாய்? ஏன் துக்கம்?" என்று கேட்க ப்ரம்மனும் நடந்தவை அனைத்தையும் கூறுகிறார் என்னைக் காத்தருள வேண்டும் என வேண்டினார். விஷ்ணுவும் கவலை வேண்டாம் நான் அவர்களை ஒரு நிமிடத்தில் அழித்து விடுகிறேன் என்று சமாதானம் கூறினார். தொடரும்... 🚩🕉🪷🙏🏻 #நாராயணீயம #🙏அம்மன் துணை🔱 #🙏ஆன்மீகம் #இந்து பெண் தெய்வங்கள் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
நாராயணீயம - தேவிநாராயிபம் தசகம் 5 மஹகாளிஅவதாரம் தேவிநாராயிபம் தசகம் 5 மஹகாளிஅவதாரம் - ShareChat