நவராத்ரி
========
ஸ்ரீ பரமேஸ்வர சக்தியின் நான்கு வடிவங்கள்
========================
1.பாத்மபுராணம் 61அத்யாயம்
--------------------------------------
ஏகைவ சக்தி: பரமேஸ்வரஸ்ய பின்னா சதுர்த்தா வ்யவகாரகாலே
போகே பவானி ஸமரேஸுதுர்க்கா க்ரோதேசுகாளி த்வவனேது விஷ்ணு:
2.ஒன்றே சக்தி
--------------------
ஏகைவ சக்தி: பரமேஸ்வரஸ்ய ப்ரயோஜனார்த்தாய சதுர்விதாபூத்
போகே பவானி புருஷேஷு விஷ்ணு: க்ரோதேசுகாளி ஸமரேஸுதுர்க்கா.
பொருள்
==========
பரமேஸ்வரனுடைய சக்தியானது உலக உற்பத்தியின்போது
1.பரமேஸ்வரருக்கு மனைவியாக ஸ்ரீபவானி தேவியாகவும்,
2.புருஷம் வடிவம் கொள்ளும்போது ஸ்ரீமஹாவிஷ்ணுவாகவும்,
3.உலகை பக்ஷிக்கும் போது ஸ்ரீமஹாகாளியாகவும்,
4.போரிடும் போது ஸ்ரீதுர்க்கையாகவும் விளங்குகிறது.
காரணாகமம்
=========
ஸ்ரீதுர்க்கா த்யானம்
=========================
ரக்தாம்பராம் ஸ்யாமலிநீம் த்வினேத்ராம்
கிரீடரத்னாங்கித ஹேமபூஷாம் சசூலகட்காம்
த்ருதசங்கசக்ராம் ம்ருகேந்திரயானாம் ரவிசந்த்ரபூஷாம்
இஷ்டார்த்தார்தீம் ஸுரவந்த்ய பாதாம்
ருத்ராம்ஸுதுர்க்காம் மனஸாஸ்மராமி
பொருள்
==========
சிவப்பு நிற ஆடையையணிந்தவளும்,பச்சைநிறமுடையவளும்,
இரண்டு கண்களை உடையவளும்,கிரீடம்,ரத்னங்களிழைத்த தங்க நகையணிந்தவளும்,கைகளில் சூலம்,கத்தி,சங்கு,சகரம் இவைகளைத் தரித்தவரும்,சிங்கத்தை வாஹனமுடையவளும்,
சூரிய,சந்திரனை ஆபரணமாக அணிந்தவளும்,விரும்பிய பொருளை கொடுப்பவளும்,தேவர்களால் வணங்கப்படும் பாதங்களையுடைய ஸ்ரீருத்ராம்ச துர்க்கையை மனதாலே ஸ்மரிக்கிறேன்.
தொடரும்.............. 🚩🕉🪷🙏🏻 #நவராத்திரி #நவராத்தி நல்வாழ்த்துக்கள் #வசந்த நவராத்திரி #வாராஹியின் ஆஷாட நவராத்திரி விழா #சியாமளா நவராத்திரி மூன்றாம் நாள்


