ShareChat
click to see wallet page
search
விஜய் ஒரு சிங்கள பவுத்த பேரினவாதத்தின் கைக்கூலி ! -வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் விஜய் ஒரு புது ரக அரசியல் நாடகத்திற்கு களமிறக்கப்பட்ட ஒரு கைக்கூலி நடிகர் என்பது தொடக்கத்திலிருந்தே அவராலேயே வெளிக்காட்டப்பட்டு வருகிறது. கொண்டையை மறைக்காமல் அவர் தொடர்ந்து படுபோலியாக நடித்துக் கொண்டிருக்கிறார். பொதுவாக இலங்கையின் சிங்கள பவுத்த பேரினவாதக் கூட்டம் தமிழ்நாட்டு அரசியலில் வெளிப்படையாக எந்த ஒரு  நிலைப்பாட்டையும் முன்வைப்பது இல்லை. ஆனால், சொந்த சுய உறவு திராவிடத்  தெலுங்கு போலி அரசியல் கூட்டத்தை வைத்து மறைமுகமாக சில கபட வேலை பார்க்கும். ஆனால் இந்த முறை நேரடியாக வெளிப்படையாக வேலை செய்கிறது. காரணம் என்ன ?! பூர்வ குடித் தமிழர்களுக்கு அடிப்படை சம உரிமை கூட அளிக்க முடியாது என்று மறுத்து தமிழர்களை இல்லாமல் அழித்து விட வேண்டும் என்று 1950 களில் இருந்து தயங்காமல் படுகொ*லை செய்துவரும் சிங்கள பவுத்த பேரினவாதம் 2009 ல் மூன்று நாட்களில் மட்டும் ஒன்றரை லட்சம் தமிழர்களை அழித்தது. ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேரை காணாமல் அடித்தது. வடக்கில் இருந்த தமிழர்களை விரட்டி அடித்தது. அதன் வேட்கை தீரவில்லை, திராவிட கூட்டத்தின் மீதும், இந்திய தேசியவாதக் கூட்டத்தின்மீது அமர்ந்தும் தமிழர்கள் எங்குமே எழுந்து விடக்கூடாது என்று வன்மத்துடனும், வஞ்சகத்துடனும் தொடர்ந்து செயலாற்றி வருகிறது. ஐநா மனித உரிமைகள் ஆணையம், சட்டத் தீர்ப்பு வழங்கும் அமைப்பு அல்ல. அது ஒரு வாத விவாதக் கூடம். தொலைக்காட்சிகளில் நடத்தப்படும்   விவாத நிகழ்ச்சிபோல. ஆனால் அங்கும் கூட இலங்கை சிங்கள பவுத்த பேரினவாதம் தமிழர்களை   இனவ*ழிப்பு செய்கிறது, போர்க்கு*ற்றம் செய்கிறது என்று யாரும் பேசி பதிய வைத்து விடக் கூடாது என்று படாதபாடு படுகிறது. ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்திற்கு உரியவர்கள் செல்லக்கூடாது என்று சுவிஸ் அரசாங்கத்தின் தூதரக அதிகாரிகள் மூலமாக விசா கொடுக்காமல் செய்ய  வைக்கிறது.   2012 ம் ஆண்டு முதல் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் தமிழர்களுக்காகப் போராடி வரும் போஸ்கொ எனும் மனித உரிமை செயற்பாட்டாளரை ஆறுமாதம் விசாரணைக் கைதியாகவே சுவிஸ் அரசு கைது செய்து சிறையில் வைத்திருக்கும் அளவுக்கு இலங்கை  சிங்கள பவுத்த பேரினவாத கூட்டம் சுவிஸ் அரச அதிகாரிகளை விலைக்கு வாங்கி வைத்திருக்கிறது. இங்கே தமிழ்நாட்டில் திராவிடக் கூட்டத்தை சிங்கள பவுத்த பேரினவாதக் கூட்டம் சலுகை விலைக்கு வாங்கி பல ஆண்டுகள் ஆகின்றன. சிங்கள பவுத்த பேரினவாதக் கூட்டம் சற்றும் எதிர்பாராத திருப்பம் நாம் தமிழர் கட்சியும், தமிழ்த் தேசியப் பேரியக்கமும். இலங்கை மண்ணில் தமிழர் இன அடையாளத்தை முற்றாக அழிக்க வேலை செய்துவரும் நிலையில் தமிழ் நாட்டில் தமிழ்த் தேசியம் பேரெழுச்சி பெற்று உயரச் செல்வதை சகித்துக்கொள்ள முடியவில்லை. திராவிட வாடகை வாய் கூட்டத்தினரை வைத்து தமிழ்த் தேசியத்தின் மீது அவதூறு பரப்பியது, அழிக்க எண்ணியது...ஆனால் பருப்பு வேகவிலை. இறுதியாகத் திரை நடிகர் விஜயைக் களம் இறக்கியது. தமிழ்த் தேசியமும் திராவிடமும் இரண்டு கண்கள் என்று கதையளந்து கொண்டையை மறைக்காமல் வந்து வசமாக மாட்டிக்கொண்டது. கச்சத் தீவை மீட்போம் என்று 70 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டில் கத்திக்கொண்டு இருக்கிறார்கள். அப்போதெல்லாம் மவுனம் காத்த இலங்கை அரசு, ஒரு நடிகர் விஜய் கச்சத் தீவை மீட்போம் என்று சொன்னவுடன், இலங்கை அரசின் வெளி உறவுத்துறை அமைச்சர் பேசுகிறார், பவுத்த பிக்குகள் பேசுகிறார்கள், இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக கச்சத்தீவுக்கு செல்கிறார், சென்று விட்டு வந்து பேட்டி தருகிறார். கச்சத் தீவுக்கு இதுவரை இலங்கையின் ஒரு அமைச்சர் கூட சென்றது இல்லை. ஆனால் அதிபர் போகிறார். இந்தக் கொண்டை வெளியே தெரிந்தவுடன்..அடுத்த வார சனிக்கிழமைக் கூட்டத்தில் விஜய் இலங்கையின் இந்த எதிர்வினைக்குப் பதில் அளிப்பார் என்று பார்த்தால் "ஈ*ழத்தமிழருக்கு ஆதரவாக நிற்போம்" என்று தோசையைத் திருப்பிப் போடுகிறார். காரணம், இலங்கையின் இந்த நாடகம் எடுபடவில்லை. எங்கே மாட்டிக்கொள்வோமே என்று மாற்றி அடித்திருக்கிறார் விஜய். தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு விஜய் யாருடைய கைக்கூலி என்று புரியாமல்தான் ஒவ்வொரு கட்சியும் அவருக்கு நூல் விட்டுப் பார்த்தது. ஆனால் அவர் காங்கிரஸ் "பேரியக்கத்தை" மட்டும் தொடாமல் ஒதுங்கிச் சென்று கொண்டே இருப்பதை உற்று நோக்கிப் பார்த்தால் முழு சிங்கள பவுத்த பேரினவாதத்தின் கொண்டை தெளிவாகத் தெரியும். விஜய் தொடர்பான நாம் தமிழரின் எதிர்வினை மிகச் சரியானதுதான். --தமிழ் ஊடகம் வார இதழ், 02/10/25 ================================== தமிழ் ஊடகம் இதழ் ஒரு தனித்துவமான இதழ். இந்திய அரசின் பத்திரிகைப் பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்ட வார இதழ். தொடர்புக்கு : editor.tamiloodagam@gmail.com , tntvnetwork@gmail.com #😨3 பிள்ளைகளை கொன்று தந்தை வெறிச்செயல்🔪 #💗HBD நிவின் பாலி🤩 #🔴11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை⛈️ #📢 அக்டோபர் 11 முக்கிய தகவல்🤗 #👧சர்வதேச பெண் குழந்தைகள் தினம் 💖
😨3 பிள்ளைகளை கொன்று தந்தை வெறிச்செயல்🔪 - யாரோ ள்மனசுகுள்ள புகுந்து இவன் உ வச்சிருக்காங்க. இவன MGR ன்னு நம்ப சனிக்கிழமை Sగ C யாரோ ள்மனசுகுள்ள புகுந்து இவன் உ வச்சிருக்காங்க. இவன MGR ன்னு நம்ப சனிக்கிழமை Sగ C - ShareChat