*தேவீ நாராயணீயம்*
*தசகம்-4*
புதிய தொடர் பதிவு!
41 தசகங்களை கொண்ட இந்த தேவி நாராயணீயம் பலேலி நாராயணன் நம்பூதிரியால் இயற்றப்பட்டது.
நாராயணீயம், ஸ்ரீமத் பாகவத கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது போல, இது தேவி பாகவதத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.
*மதுகைடப வதம்*
3) ஏவம் முஹு; ஸங்கர,விச்ரமாவுபௌ பர்யாயதோ வர்ஷ,சஹஸ்ரபஞ்சகம் க்ளானிம் விநா சக்ரது; ரச்யுத: க்ளமாது விச்ராந்திமிச்சன்ன,ஸுரௌ ஜகாத தௌ
பொருள்: இப்படியாக
மாறி மாறி இடைவெளி இல்லாமல் யுத்தம் செய்கிறார் விஷ்ணு.
5000 வருடங்கள் போர் நடக்கிறது மிகவும் சோர்ந்து போகிறார்.
இந்த அஸுரர்களின் பலம் இப்படி வளர்ந்து கொண்டே போகிறதே! ஆனால் நம் பலமும் வீரமும் எங்கே போனது எனத் தெரியவில்லையே!. இவர்களை ஏதாவது உபாயம் செய்தே ஜயிக்க முடியும் என யோசித்து அவர்களிடம் சொல்கிறார். என்ன சொல்கிறார்?
4)ச்ராந்தேன பீதேன, ச பாலகேன ச ப்ரபு: புமான் நைவ, கரோதி ஸம்யுகம் மத்யே,ரணம் த்வௌ, க்ருத விச்ரமௌ யுவாம் ஏக: கரோம்யேவ, நிரந்த,ராஹவம்
பொருள்: யுத்தத்தில் சோர்வடைந்தவன், நிராயுதபாணியானவன், பாலகன், கீழே விழுந்தவன் இவர்களுடன் யுத்தம் செய்வது வீரர்க்கு அழகல்ல.
இது தர்மமும் அல்ல.
நீங்கள் இருவரும் மாறி மாறி யுத்தம் செய்தீர்கள்.
அதனால் நீங்கள் களைப்படையவில்லை. ஆனால் நான் இடைவிடாமல் யுத்தம் செய்தேன்.
அதனால் நான் சிறிது இளைப்பாறியதும் யுத்தம் மீண்டும் தொடங்குவோம்.
இது உறுதி என்றார்.
தொடரும்... 🚩🕉🪷🙏🏻 #நாராயணீயம #🙏அம்மன் துணை🔱 #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #பக்தி கதைகள்


