ShareChat
click to see wallet page
search
🛕 “ராஜரிஷியாய் உயர்ந்த விஸ்வாமித்திரர் – காயத்ரி மந்திரம் பிறந்த தருணம்!” 🌞 முழு ஆன்மிகக் கதை ஒரு அமைதியான காடு… முன்னில் ஒரு சிறிய ஆசிரமம்… அந்த ஆசிரமத்தின் நடுவில் அமர்ந்து, ஆழ்ந்த கவனத்தில் எதோ எழுதி கொண்டிருந்தார் விஸ்வாமித்திரர்… அவர் — ஒரு காலத்தில் ராஜா… ஒரு சத்திரியன்… ஆனால் இன்று — ஞானத்தைத் தேடும் தவசீ! அந்த வேளையில், மௌனமாக ஆசிரமத்திற்குள் நுழைந்தார் வசிஷ்டர். விஸ்வாமித்திரர் கவனம் செலுத்திக் கொண்டிருந்ததால் அவரை கவனிக்கவில்லை… அப்பொழுது வசிஷ்டர், லேசான கோபத்தோடு, “சுற்றி என்ன நடக்கிறது என்று பார்க்க மாட்டீர்களா?” என்று கேட்டார். அதிர்ந்தார் விஸ்வாமித்திரர்… உடனே எழுந்து நின்றார்… “வணக்கம் குருவே! எழுதுவதில் கவனம் சென்றதால் தங்களை கவனிக்கவில்லை… மன்னிக்கவும்!” ஆனால் வசிஷ்டர், சண்டைக்குத் தயாரானவர் போல, “என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டார். “வேதாந்தம்… உபநிஷத்துகள்…” என்றார் விஸ்வாமித்திரர். உடனே வசிஷ்டர் கூர்மையாக, “நீங்கள் எப்படி வேதங்களை எழுதலாம்?” விஸ்வாமித்திரர் திகைத்தார்… “எனக்கு ஒன்றும் புரியவில்லையே…” “நீங்கள் சத்திரியன் தானே?” “ஆம்.” “அப்படியிருக்க, வேதங்களை எழுதுவது உங்கள் பணி அல்ல! பிராமணர்கள் மட்டுமே அதை எழுத வேண்டும்!” அப்போது விஸ்வாமித்திரரின் கண்களில் தீப் பறந்தது… “அது தவறு! சாதி அறிவுக்கு அளவுகோல் இல்லை! ஞானம் எல்லோருக்கும் பொதுவானது!” வசிஷ்டர் சற்று திட்டமாக, “நீ என்னை ஒருமையில் பேசுகிறாயா?” “ஆம்! நான் ஒரு ராஜா! மரியாதையோடு பேச வேண்டும்!” அப்போது வசிஷ்டர் சிரித்தார்… “அப்படியா? நீ உண்மையில் ரிஷி என்றால், உலகம் முழுவதும் பயன்படும் ஒரு தியான மந்திரத்தை எழுத முடியுமா?” விஸ்வாமித்திரர் கண்கள் சிவந்தன… “இது வேண்டுமென்றே செய்யும் வம்பு!” “நடக்கட்டுமே… ரிஷிதானே நீ?” என்றார் வசிஷ்டர். ஒரு நாழிகை அவகாசம் கேட்டார் விஸ்வாமித்திரர்… ✨ தியானத்தின் உச்சியில் பிறந்த ஒளி… விஸ்வாமித்திரர் கண்களை மூடிக் கொண்டார்… முதலில்… வசிஷ்டர் மீது இருந்த கோபத்தை மனத்திலிருந்து வெளியேற்றினார்… அதன் பின்… முழு மனதையும் ஒரே ஒளியிடம் அர்ப்பணித்தார்… அவர் மனக்கண்ணில் தோன்றியது… 👉 சூரியன்! உலகத்துக்கு ஒளி தரும் அந்த பேரோளி… ஒரு நாழிகை கடந்தது… அப்போது விஸ்வாமித்திரரின் உதடுகளில் இருந்து இந்தப் புனித ஒலியெழுந்தது… “ஓம் பூர் புவ: ஸுவ: தத்ஸவிதூர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்” அதில் எந்த ஒரு கடவுளின் பெயரும் இல்லை… 👉 “உலகத்துக்கு நீ ஒளி தருவது போல என் அறிவுக்கும் ஒளி தருவாயாக!” என்ற சுத்தமான தியானமே அதில் இருந்தது… அந்த மந்திரத்தை எழுதித் வசிஷ்டரிடம் கொடுத்தார் விஸ்வாமித்திரர்… 🌺 வசிஷ்டரின் பரவசமான தீர்ப்பு அந்த மந்திரத்தைப் படித்த வசிஷ்டர், மெய்சிலிர்த்து கூறினார்… “அற்புதம் விஸ்வாமித்திரரே! இந்த மந்திரத்தை உங்களிடம் இருந்து பெறவே நான் திட்டமிட்டு உங்களுக்கு கோபம் காட்டினேன்…” “இனி நீங்கள் வெறும் ரிஷி அல்ல… நீங்கள் ராஜரிஷி… நீங்கள் பிரம்மரிஷி!” அன்று பிறந்தது தான் — 👉 காயத்ரி மந்திரம்! இன்று அது — 👉 உலகின் உயிர்மந்திரம் #🙏ரங்க பஞ்சமி #🙏அயோத்யா ராமர் கோவில் #🙏🏻ராதா கிருஷ்ணன்✨ #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏
🙏ரங்க பஞ்சமி - ஆன்மிக கதை! ராஜரிஷியாய் உயர்ந்த விஸ்வாமித்திரர் காயத்ரி மந்திரம் பிறந்ததருணம்! 2  ٠ 4 ஆன்மிக கதை! ராஜரிஷியாய் உயர்ந்த விஸ்வாமித்திரர் காயத்ரி மந்திரம் பிறந்ததருணம்! 2  ٠ 4 - ShareChat