யாரோ ஒருவரை மகிழ்வித்தாக
நினைத்துக் கொண்டு கொட்டிக் தீர்த்துக் கொண்டிருந்தது மழை ..
யாருமே ரசிக்கவில்லை சாளரங்கள்
மூடியிருந்தன அவர்கள் தத்தம்
வேலைகளில் மூழ்கி கிடந்தனர்..
வீதிகளில் வருபவர்கள் எல்லோரும்
குடைகளை பிடித்து மழை நீர் தங்களை
நனைத்து விடாமல் பார்த்துக்
கொண்டனர்..
இத்தனை நிராகரிப்பின் மத்தியிலும்
ஓடி வந்த மழைநீர் கால்களை நனைத்துக்
கொண்டு ஓடிக்கொண்டிருந்தது..
ஒரு சாரல் மழையில் நனையக்கூட
நேரமில்லாமல் மனிதர்கள் அப்படி
எதைத்தான் சாதித்து விடப்
போகிறார்கள்..
#⚡️Trending Quotes✍️ #😒தனிமை Quotes #🤔புதிய சிந்தனைகள் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #❤️எங்கேயும் காதல்

