ShareChat
click to see wallet page
search
அப்பொழுது அந்த சிதறி கிடந்த வளையலை ஒவ்வொன்றாக எடுத்தவனுக்கோ ... அப்பொழுது தான் ஒன்றை அவன் கவனித்தான் அங்கே ஒரு சிறு அறை உள்ளதை ... அப்பொழுது அவன் இதயம் இன்னும் நூறு மடங்காக துடித்தது ... அதில் இன்னும் சொல்ல முடியாத மாற்றங்கள் இன்னும் நிகழ ... அவன் மனதை பக்குவப்படுத்திக் கொண்டு கதவை திறக்க ... ஒரு வழியாக ... அப்பொழுது அது கலைக்கும் விதமாக ஒரு குரல் கேட்க ??? ... அடுத்த நிமிடமே அது யார் என்று பார்ப்பதற்காக அப்படியே மூடி விட்டான் அவள் உள்ளே இருப்பது அறியாமலேயே .... டேய் ! நீயாடா ... என்று சொல்வதற்குள்ளே ... அப்பொழுது குடிபோதையில் வந்த ஆறுமுகமோ ... என்ன கதவு திறந்து இருக்கு ... குடிச்சாலும் இந்த ஆறுமுகம் உஷாரா இருப்பாண்டா ... என்ன நம்பி இவ்வளவு பெரிய பொறுப்ப தயா அய்யா என்கிட்ட கொடுத்திருக்காரு ... அவன் உள்ளே இருப்பதை மறந்து லைப்ரரி கதவை வெளியே சாற்றி விட்டு போக ... அடுத்த சில வினாடிகளில் மட்டையாகி இருந்தான் ... டேய் ! என்னடா பண்ற ??? ... கதவ தொற ... என்று கத்தி கொண்டு இருக்க ... போகும் ஆறுமுகத்துக்கு இவன் குரல் எங்கே கேட்கப் போகிறது ... அவனோ ஆழ்ந்த நித்திரையில் ... அவனோ தொடர்ந்து கத்திக்கொண்டே இருக்க ... அப்போதுதான் என்று புரிந்தது அவனுக்கு ... உள்ளே வரும்போது அவன் பேண்ட் பாக்கெட் யில் சரக்கு பாட்டில் இருந்தது இப்பொழுது ஞாபகம் வர ... அவனா குடிச்சுட்டு மட்டை ஆகிட்டான் நினைக்கிறேன் ராஸ்கல் ... அவன அப்புறமா வச்சுக்கலாம் .. இப்ப நான் எப்படி வெளியே போறது ??? .... என்று யோசித்துக் கொண்டிருக்க ... அப்பொழுதுதான் ஒன்னு ஞாபகம் வந்தது அவனுக்கு சத்யாவ தேடி தானே வந்தோம் ... ஒருவேளை வீட்டுக்கு போயிருந்தா ??? .. சரி அக்காவுக்கு போன் பண்ணுவோம் ... ஹலோ அக்கா ... அவன் ஏதோ கேட்பதற்குள்ளே ... டேய் ! எங்கடா இருக்க ??? .. காலேஜ்ல. .. டேய் ! ஒரு சந்தோஷமான விஷயம் ... எங்கே இருந்தாலும் வீட்டுக்கு நைட்டு வீட்டுக்கு வந்துரு ... ம்ம் ... எதுக்கு ??? ... சஸ்பென்ஸ் .. அக்கா ... அக்கா ... நான் சொல்றதை கேளு ??? .. என்று சொல்வதற்குள்ளே வைத்துவிட ... என்ன இந்த அக்கா .... புரியாத மாதிரி பேசுறா ... எப்ப பாத்தாலும் ... அவ முகத்துல எந்த பதட்டமும் இல்லாம பேசுறானா ... அப்போ ! அவ வந்துட்டான்னு நினைக்கிறேன் ... சரி நம்ம இங்க இருந்து போயிருவோம் ... என்று வெளியே செல்ல போகும்போது தான் தெரிந்தது ... ஆமால ! ஆறுமுகம் ... பல்லைக் கடித்துக் கொண்டு உடைச்சிட வேண்டியது தான் ... என்று நினைத்து கொண்டிருக்கும் போது அந்த சைடு ஒரு கதவு இருக்கு ... சரி அந்த வழியா போடலாம் ... என்று வேகமாக கதவை திறக்க முயலும் போது ...அது டைட்டாக இருப்பது தெரிய ... முதல்ல திறந்தேனே ... என்னாச்சு இதுக்கு .. என்று நினைத்து கொண்டே இருக்கும் போது ... கதவில் ஒரு அழுத்தம் கொடுத்தவன் ... அதில் தானாகவே திறந்து விட ... அப்ப திறந்திடுச்சு ... என்று சொல்லிக் கொண்டே ஆதி உள்ளே செல்ல ... அதுவும் கும் இருட்டு ... சுற்றிலும் முற்றிலும் பார்க்க அவனுக்கு எதுவுமே தெரியவில்லை ... ஃபோன் ல லைட் ஆன் பண்ணலாம் என்று நினைத்துக் கொண்டே அதை ஆன் செய்ய முற்படும்போது அதுவும் பேட்டரி லோ என்று காட்ட .... என்ன பண்றது ??? ... என்று நினைத்துக் கொண்டே மேலும் முன்னேற ... அதுவும் இருட்டு என்பதால் ஒரு அடி தான் வைத்தான் அதில் தடுமாறி .... அவளோ மயங்கி கிடப்பது அறியாமல் இருக்க .. அடுத்த நிமிடமே அவள் மேலே சரிந்திருந்தான் அந்த ஆறடி ஆண் மகன் ... அதில் அவனுக்கோ எந்த சேதாரமும் இல்லாமல் இருக்க ... அவளுக்கோ மென் பஞ்சு தேகம் எல்லாம் வலியில் முழங்கிட அதுவும் மயக்கம் தெளிந்து .... அடுத்த நிமிடமே தான் எங்கே இருக்கிறேன் என்று மறந்து சத்யா வலியில் கத்த ஆரம்பித்து விட்டால் ... அது யார் என்று தெரியாமல் அவனை வசை பாடி கொண்டு இருக்கா ... தன் பயத்தை மறந்து ... அவள் போட்ட கூப்பாடியில் தான் அவள் இங்கே இருப்பது தெரிய ... இவனுக்கு ஐயோடா ! என்று இருக்க ??? ... ஒரு சில நிமிடம் கழித்து தான் ... அவள் இன்னும் கத்திக் கொண்டிருப்பது தெரிய ... இதற்கு மேலும் பொறுக்காதவனாய் அவளை அதிரடியாக தன்னுள் சிறை எடுத்த அவனோ ... அது யார் என்று தெரியாமல் ... மேலும் அவனிடம் விடுபட முடியாமல் போராடிய அவளோ ... அடுத்து அவன் செய்யும்போதும் காரியத்தில் மூச்சற்று நின்றால் பேதை அவள் ... ஆம் ! தன்னவளுக்கு முதல் முத்தம் ... அதுவும் ஆழ்ந்த முத்தம் ... அவனை மறந்து அவன் செய்த காரியத்தில் .... தன் அவளோ விழி பிதுங்கி நிற்க அதுவும் ஒரு சில வினாடி தான் ... அதில் தன் அவன் ஸ்பரிசம் உணர்ந்த அடுத்த வினாடியே ஆழிப் பேரலையாக தன்னை சுருட்டி கொண்டிருக்கும் கள்வனின் இதழ் சுவையில் லகித்து தான் போயிருந்த பெண் அவளோ ... நேரம் கடக்க ... கடக்க ... அவள் பால் பித்தம் கொண்ட அவனோ ... அதில் மேலும் அவளை தன்னில் சுருட்டி கொள்ள ... அதில் பயத்தில் அவன் கரங்களை அவள் கழுத்தை இறுக பற்றி கொண்ட பெண் அவளோ ... முத்தம் தாண்டி பித்தம் கொள்ள மேலும் முன்னேறுபவனின் கைகள் அவள் இடையில் நிலை நிறுத்தி கொள்ள ... இதழோ இன்னும் போராட்டம் நடத்திக் கொண்டு தான் இருந்தது ... அதிலேயே லகித்து போயிருந்த அவளோ ... அவன் காட்டும் வித்தையில் இன்னும் மயங்கி கிடக்க ... மேலும் ... அவள் அறியாதது அவன் இடையில் ஊர்வலம் நடத்திக் கொண்டிருப்பது ... மோகத்த தீயில் இருந்த அவனோ ... தன்னை மறந்து அவளை ஆட்கொள்ள போக ... மேலும் இதழில் கரைந்த அவனோ .... பித்தன் ஆகி அவள் கழுத்து வளைவில் முகம் புதைக்க ... அதில் அவள் மென்மையை உணர்ந்த அவனோ ... அதை பார்க்கும் ஆவலில் அதுவும் தன்னை மறந்து அவன் செய்யப் போகும் வேலையில் அதில் உலகம் மறந்தான் ... அவளோ இதழில் சுவையில் கரைந்து போக ... அவனின் இந்த நெருக்கம் பெண் அவளை தடுமாறத்தான் செய்கிறது ... ஆனால் அவளோ உணர்வின் பிடியில் சிக்கித் தவிக்க ... அழுத்தம் கொடுக்கும் போது தான் அவன் கைகளோ மேலும் அவள் இடையோடு பற்றி இருப்பது தெரிய ... அது தடுக்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்க பெண் அவளோ ... அதில் முற்றும் அமைதியாகி டா ... மேலும் மற்றொரு கையோ அவள் ஆடைகளை கலைய பார்க்க. .. . அதில் மேலும் பல பூகம்பங்கள் எழுந்தது அவளுள் .... அதில் வார்த்தைகள் அவளுள் எழவில்லை ... இறுதியாக பெண் அவளின் பெண்மையை உணர ... மேலும் அவள் ஆடையை கலைக்க பார்த்தவனின் கைகளோ அவளின் தாலியை பற்றிக்கொள்ள .... அப்பொழுதுதான் இத்தனை நேரம் இருந்த மோகம் அறுபட்டு அவனின் முகம் எல்லாம் வேர்க்க தொடங்க ... அடுத்த நொடியே அவளிடம் இருந்து விலகிய போராடியவனின் ஒரு கை அவள் புடவை பற்றி இருக்க ... அதில் மேலும் சங்கடத்தில் நெளிந்த அவனோ ... அதில் தன்னில் இருந்து விலக பார்க்க ... அப்பொழுது தன்னிலை உணர்ந்த பெண் அவளோ .... அவன் முகம் காணாது அதில் தன்னில் பிரித்தெடுக்க ... இருவரிடமும் பலத்த அமைதி ... நேரம் செல்ல செல்ல இருவரும் சற்றே தள்ளியே இருக்க ... ஒருவரை ஒருவர் காணாது ... அவளோ தூக்க மிகுதியில் நிம்மதியாக தூங்கு விட .. ஏனோ ! ஆண் அவனோ தூக்கத்தை தொலைத்தே விட்டான் பெண் அவளின் அருகில் ... சிறிது நேரத்தில் புயலுடன் கூடிய மழையும் வெளியே பேய ஆரம்பிக்க ... மன்மனம் கலந்த வாசனை காற்றோடு கலக்க ... அதில் குளிர் காற்றும் வீசியது ... அதில் தூக்கத்திலேயே நடுக்கம் கொண்ட பெண் அவளோ ... குளிரில் போர்வை தேடிக் கொண்டிருக்க ... அதில் தானாகவே அவனுள் சேர்ந்து விட்டால் தாரகை ... அதுவும் குளிருக்கு இதமாக தன் அன்னை மடியில் இருப்பது போல ... இதை பார்த்துக் கொண்டிருந்த அவனுக்குத்தான் கூச்சம் பிடுங்கி தின்றது ... அதில் அவன் வார்த்தைகள் தடுமாற ... அதை உணராத நிலையில் பெண் இருக்க ... சற்று நேரத்தில் மழையும் ஓய்ந்தது ... இருவரும் ஒருவரை ஒருவர் காணாது அப்படியே தூங்கி போக .... எப்பொழுது போல காலை பொழுது அழகாக விடிய ... வீட்டுக்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி ... என்ன அதிர்ச்சி காத்திருக்கிறது நாளை பார்க்கலாம் ??? .... இனி இவர்களின் நிலைதான் என்ன ?? ... திருமணத்தைப் பற்றி வெளியே கூறுவன ஆதி ??? ... காத்திருங்கள் அடுத்த பதிவில் ??? ... கோகுலத்து கண்ணா கண்ணா சீதை இவள் தானா ❣️ ❣️ ❣️ தொடரும் .... "கோகுலத்து கண்ணா கண்ணா சீதை இவள் தானா ❣️❣️❣️", - பிரதிலிபியில் படிக்க :, https://tamil.pratilipi.com/series/ #pratilipi stories #pratilipi page social #pratilipi #ebooks pratilipi #pratilipi கதைகள் உலகம் கோகுலத்து-கண்ணா-கண்ணா-சீதை-இவள்-தானா-nuo55wadyegx?language=TAMIL&utm_source=android&utm_medium=content_series_share இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்
pratilipi stories - ShareChat
00:14