
८ ह प्रतिक्रिया · २८९ शेअर | அருள்மணக்கும் பழநியிலே அமர்ந்திருக்கும் ஆண்டவனே ஞானபழ வேல்முருகா ஞானமருள்தா எனக்கு காவடியை தோளிருத்தி கால்நடையாய் ஓடிவந்தேன் பாதமெல்லாம் நோகுதப்பா பேரருளைத் தாருமப்பா துள்ளிவரும் மானெனவே துரத்திவரும் வினையெனக்கு கோலமுகம் காட்டிடப்பா கர்மவினை தீர்ந்திடவே வெள்ளிரதம் மேலிருந்து வெள்ளிமுகம் மின்னிவர சொர்க்கமுண்டு கண்களுக்கு சோதிமுகம் காணயில வேலழகு போலதொரு வடிவழகு தெய்வமுண்டு கோலமயில் ஏறிவரும் குன்றமர்ந்த வேலழகாம் வெள்ளிமுகம் பனிரெண்டு வேலனுக்கு சொந்தமுகம் சித்தனவர் வித்தையிலே சிரித்திருக்கும் தங்கமுகம் தங்கத்தேர் மேலிருந்து தங்கமுகம் மின்னிவர திருவண்ணாமலை கூட்டமெல்லாம் திருத்தணிக்கை ஓடுதப்பா பக்தருக்கே திறந்திருக்கும் பழனிமலை உச்சியிலே பாலாலே குறைச்சலில்லை பாலமுருகன் கோவிலிலே தென்பழனி வேலனுக்கு தேனாலே குறைச்சலில்லை தெய்வானை தோகையவள் தேரோட்டும் கோவிலிலே சித்திர வள்ளியுடன் செந்தூரில் நீயிருக்க உன்னையே நம்பிவந்தேன்! உன்னருளைத் தாமுருகா அன்னமிடும் மடத்தினிலே ஆண்டியாக வந்தவனே பால்குடத்தை நானளிக்க பாவவினைத் தீருமப்பா பிரபெடுத்து ஆடிடுவாய் பிணிதீர்க்கும் வேல்முருகா அருளாடி உருவினிலே! ஆறுமுகா வந்திடுவாய் இருளோடி வாழ்வெனக்கு ஈதென்ன வேல்முருகா மலராடும் விழியாலே மயிலேறி வாமுருகா | Ramasamy Ramasamy

