புரட்டாசி ஸ்பெஷல் 06🌲
*********************************
🌹நாலாயிர திவ்ய பிரபந்தம்
***********************************
🚩மைத்தகுமா மலர்க்குழலாய் வைதேவீ விண்ண ப்பம்
ஒத்தபுகழ் வானரக்கோன் உடனிருந்து நினைத் தேட
அத்தகுசீ ரயோத்தியர்கோன் அடையாள மிவை மொழிந்தான்
இத்தகையால் அடையாளம் ஈதுஅவன்கை மோதிரமே
🌹விளக்கம்:
🔹மைபோல் கருத்த நிறத்தை உடைய சிறந்த மலர்களை அணிவத ற்கு உரிய கூந்தலையுடையவளே!
🔹பிராட்டியே அடியேன் பணிவுடன் கூறுவது என்னவென்றா ல் பெருமாளோடு இன்பத் துன்பங்களை ஒத்தி ருக்கப் பெற்றவன் என்ற கீர்த்தியையுடைய
🔹வானரஅரசன் சுக்ரீவன், இராமபிரானோடு கூட அமர்ந்து உங்களைத் தேடும்படி நாலா புறமும் வானர படை வீரர்களை அனுப்ப,
🔹உங்களை பிரிந்தபின் உணவும் உறக்கமும் கொள்ளாமலும், அமர்ந்திருக்கு ம் போது ஏதாவது தன்னைக் கடித்தாலும் தன் மேல் ஊர்ந்து போனாலும் அதை உணராமலு ம், தனக்கு விருப்பமான எந்த பொருளைப் பார்த்தாலும் உங்களையே நினைத்துக் கொ ண்டும் அந்த நிலைக்குத் தக்க உங்கள்மேல் அன்பென்னும் குணத்தையுடைய
🔹அயோத்தி மக்களுக்கு அரசனான பெருமாள் அடையாளங்கள் இவை இவை என்று அடியேனிடத்தில் சொல்லியருளினான்
#🙏பெருமாள் #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #🙏ஆன்மீகம் #அர்ச்சனா ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் 💝🙏 #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🔹இப்படியாக இவை எனக்கு தெரிய வந்தன. (இதற்கு மேலும்) அடையாளம் இந்த இராம பிரானுடைய திருக்கையில் அணிந்து கொள்ளும் மோதிரமாகும்.
🌹ஜெய ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதாராம்...