ஸ்ரீ மடத்தின் நிர்வாகத்திலுள்ள கோவில்களில் நித்ய பூஜை விசேஷ பூஜை உற்சவம் எல்லாம் ஒழுங்காக நடைபெறவேண்டுமே.
அந்தக் காலத்தில் ஸ்ரீமடம் நிர்வாகத்திலிருந்த பல கோவில்களில் பொருளாதாரம் வரவு சிலவுக்கு ஈடுகட்ட முடியாத நிலையில் தான் இருந்தது.
ஸ்ரீ புதுப்பெரியவாள் இந்தத் துறையில் கவனம் செலுத்தினார்கள் ஸ்ரீ பங்காரு காமாக்ஷி அம்மன் நித்ய பூஜா டிரஸ்ட் என்ற அறக்கட்டளையைத் துவக்கினார்கள்.
அந்த அறக்கட்டளையின் முழு விவரத்தையும், மகாப்பெரியவாளிடம் விண்ணப்பித்து அவர்கள் இசைவைப் பெற்றுக்கொண்டு வரும்படி பணித்தார்கள் புதுப் பெரியவாள்.
டிரஸ்ட் நிர்வாகிகளுடன் ஸ்ரீ அம்மன் பிரசாதம் எடுத்துக் கொண்டு செல்லவேண்டும் என்று உத்திரவாயிற்று.
மகாப் பெரியவாள் ஷோலாப்பூர் அருகில் ஒரு கிராமத்தில் முகாம்இருப்பிடத்தைத் தேடிப்பிடித்துக்கொண்டு சென்றனர்.
பெரியவாள் முன்னிலையில் நின்றனர் அணுக்கத் தொண்டர் சற்று பெரிய குரலில் கூறினார்.
தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவில்
டிரஸ்டிகள் தரிசனத்துக்கு வந்திருக்கா ஸ்தானிகர்
பிரஸாதம் கொண்டு வந்திருக்கார்.
முதலில் பிரசாதம் கொடு என்று சமிக்ஞை ஒரு மூங்கில் தட்டில் ஒரு சாதரா வாடிப்போன நிர்மால்ய மாலை
புஷ்கலமாகக் குங்குமம்.
குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு
மாலையை கண்ணில் ஒற்றிக்கொண்டார்கள் இன்னும் என்ன இருக்கு.
அம்பாள் பிரசாதமாக ஒரு சால்வை மகா பெரியவா கண்களில் ஒரு தேஜஸ் ஏதோ நெஞ்சில் நினைவோட்டம்.
ஸ்தானீகரைக் கூப்பிடு
சற்று அருகில் சென்றார் பாதாதிகேசம் அருட்புனலால்
ஒரு நீராட்டு சங்கரசாஸ்திரிகள்
புத்திரன் தானே.
ஆமா என்ன ஒற்றுமை பார் பட்டத்துக்கு வந்தபோது அவர் தான் சாதரா கொண்டு வந்து
பூவாலேயே அபிஷேகம் பண்ணி ஹ்ம் அப்புறம் பிரசாதம்
கொடுத்தார்.
மடத்தின் மூலமா அவருக்குப் பதில் மரியாதை கூடப்
பண்ணினோம் தெரியுமோ
அப்பா சொல்லியிருக்கார்
யுகமாகக் கழிந்த இரு விநாடிகள்.
நீயும் அவரைப் போலவே சாதரா நிர்மால்யம் குங்குமம் கொண்டு
வந்திருக்கே.
உனக்கும் பதில் மரியாதை
செய்யணும் ஆனா என்னிடம் ஒண்ணுமேயில்லை நான் அகிஞ்சனன் - ஒரு பைசா கூட வைத்துக்கொள்ளாதவன்.
ஸ்ரீ மடம் பொறுப்பிலிருந்து முற்றிலுமாக விலகிக்
கொண்டபடியால் இவ்வாறு கூறினார்கள்.
மௌன இடைவெளி இவனுக்கு
ஒரு முத்திரைப்பவுன் வாங்கி பதில் மரியாதை செய்தால்
தேவலை உங்களால்
யாராலேயாவது முடியுமோ.
அந்த கிராமத்தில் நகைக்கடை ஏது சில மாதர்கள் நகைகளைக்
கழற்றிக் கொடுக்கத்
தயாராக இருந்தார்கள்.
ஆனால் பெரியவா முத்திரைப்
பவுன் அல்லவா கேட்கிறார்கள்
இந்தப் பரபரப்பில் அழுகையே வந்து விட்டது.
பெரியவா தன்னைஅகிஞ்சனன் என்று எப்படிச் சொல்லலாம்
மனம் பரிதவித்தது.
கண்ணீர் விட்டபடியே நமஸ்காரம் செய்து
பெரியவாளோட அனுக்ரஹம் இருந்தால் போதும்
காமாக்ஷி கருணையிலே
நாங்கள் எல்லாம் சௌக்கியமாகவே இருக்கோம்.
விம்மினேன் பெரியவா பரிவுடன் கடாக்ஷித்தார்கள
இதே எண்ணத்தோடே இருந்து கொண்டிரு கடைசிவரை க்ஷேமமாய் இருப்பாய்.
ஆனால் பெரியவாள் வெற்றுச் சொல்லுடன் நின்று விடவில்லை முடிகொண்டான்
கிராமத்தைச் சேர்ந்த ஒரு
தனிகரிடம் சொல்லி விரைவில்
முத்திரைப் பவுன் அனுப்பிவைத்தார்கள்.
ஸ்தானீர்களாய நாங்கள் பங்காரு காமாக்ஷிக்கும்
பரமாசார்யாளுக்குமிடையே எந்த ஒரு பேதத்தையும் காண்பதில்லை.
"ஜெய சங்கர ஹர ஹர சங்கர"
#periyava #mahaperiyava #truestory
#kanchimahaperiyava #kanchimahan
#kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman
#mahaperiyavamagimaigal
#sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்

