ப்ரஹ்ம வித்தை…(03 )
ஆத்மா என்றால் என்ன ?- தொடர்சி….
‘நான்’ எனப்படும் இந்த சரீரம்(உடல்) ஆன்மா அல்ல எனப்பட்டாலும், கண்களால் பார்த்தல்,
காதுகளால் கேட்க்கப்கடுவது, போன்ற அறிவுபூர்வமான செயல்களை செய்து கொண்டிருக்கும்; ஸூக்ஷ்ம (நுட்பமான) இந்திரீயங்களை ஆத்மா என கூறலாமா- முடியாது,
ஏனெனில் எப்பொழுதும் விழிப்பு நிலையில் இருக்கும் ’நான்’ என்னும் அறிவுப் பொருளே ஆத்மா என கூறுகிறது ஆத்மலக்ஷ்மணம்.
அதாவது ஸ்வப்ன காலத்தில்’ஞானேந்திரியங்கள்,
கர்மேந்திரியங்கள் எனும் பத்து இந்தரீயங்களும்,
ஓயந்துவிடுகின்றது. எனவே இந்திரீயங்களும் ஆத்மா/ ஆன்மா இல்லை. இவைகள் தூங்கும் போது இயங்குவதில்லை. தூங்கும் போது இயங்கும் மனோபுத்திகள் இயங்குவதால் அவை
ஆத்மா/ஆன்மா என்பது பொருந்துமே. இல்லை, பொருந்தாது, ஏனெனில் ஸ்வப்னாவஸ்தையில் மனோ புத்திகள் இயங்கினாலும்,’ஸூஷுப்தி நிலையில் அதாவது ஆழ்ந்த நல்ல தூக்கத்தில்
அவைகளும் இயங்குவதில்லை. எனவே மனோபுத்திகளும் ஆத்மா இல்லை.
அப்படியென்றால்’ ப்ராணன்’ ஸ்வப்னாவஸ்தையிலும்,ஸுஷுப்தி காலத்திலும்,
‘உச்வாஸ,நிச்வாஸங்கள்’ அதாவது மூச்சிழுத்தல்,
மூச்சுவிடுதல், என இயங்கிக் கொண்டிருக்கின்றதே அது ஆத்மா என ஒப்புக்கொள்ளலாமா ? முடியாது !
ஏனெனில. ஆத்மா என்பது, நித்தியமான, ஞானப்பொருள், எனவே அதுவம் ஒத்துவருவதில்லை.மேலும் ஸுஷுப்தியிலும்,
‘நான்’ ஒன்றுமறியாமல் சுகமாய் தூங்கினேன் என்ற அனுபவம் இருக்கின்றபடியால்,” நான் சுகமாகத் தூங்கினேன் எனும் அனுபவத்தில் அடங்கிய நான் என்னும் அறிவு இந்தப் ப்ராணனுடையதே ஆகவே ஒத்துவராது.
எனவே ஜாக்ரதத்திலும், ஸ்வப்னத்திலும் பிராணனுக்கு உச்வாஸ,நிச்வாஸங்கள்’ அதாவது மூச்சிழுத்தல், மூச்சுவிடுதல், என இயங்கி சுகம்,
ஒன்றுமறியாமை ஆகிய இரண்டு அனுபவமும் காணப்பட வேண்டும்.ஆனால் அவ்வாறு அனுபவத்தில் இல்லை. ஆகவே ப்ராணன் எனும் அறிவுப் பொருளாகிய ஆத்மா அல்ல.
மேலும் தெரிந்து கொள்ள வேண்டியது இந்த ஸ்தூல உடலில் இருந்து இயங்கும் இந்திரீயங்கள்
-ப்ராண, மனோ, புத்திகளின் சேர்க்கையான ஸூஷ்ம சரீரமானது(உடலானது) அஜ்ஞானமெனும்
காரண சரீரமானது ஆத்மா /ஆன்மாவாகாது என்பது திண்ணம்.
🚩🕉🪷🙏🏻 #அகத்தியர் சித்தர் #🙏ஆன்மீகம் #🙏பக்தி போதனைகள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சித்தர்கள் வாக்கு


