ShareChat
click to see wallet page
search
1,54,000.00 கோடி ரூபாய் போச்சே.... கையாலாகாத திமுக அரசு... வெளியான முதல்வரின் வெளிநாடு பயணம் பின்னணி.. தென் கொரியாவை சேர்ந்த ஹ்வாசங் எண்டர்பிரைசஸ் நிறுவனம், கடந்த ஆகஸ்ட் மாதம், சுமார் 1720 கோடி ரூபாய் முதலீட்டில், தமிழகத்தில் தூத்துக்குடியில் ஆலை அமைக்க இருப்பதாக அறிவித்தது. இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் என, இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் போது, தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்து இருந்தார். ஆனால் அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஹ்வாசங் நிறுவனம் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் தொடங்க இருப்பதாக இருந்த சுமார் 1720 கோடி ரூபாய் முதலீட்டிலான ஆலையை ஆந்திராவில் தொடங்க இருப்பதாக விசாகப்பட்டினத்தில் நடந்த தொழில் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் அறிவித்தது. இந்த விவகாரம் திமுக அரசில் தொழில் துறை தோல்வியுற்றதை வெளிப்படுத்துவதாக விமர்சனம் செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. ஹ்வாசங் நிறுவனம் கேட்ட நிலம் மற்றும் மானியத்தை திமுக அரசு கொடுக்க மறுத்ததால் தான், சுமார் 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை கொடுக்க கூடிய தொழிற்ச்சாலை குஜராத்துக்கு சென்று விட்டது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். மேலும் இதே போன்று திமுக அரசின் தவறான அணுகுமுறையால், ஃபாக்ஸ்கானின் சுமார் 4 கோடி மதிப்பிலான மற்றொரு ஆப்பிள் ஐ போன் உற்பத்தி ஆலை அண்டை மாநிலமான கர்நாடகாவுக்கு சென்று இருக்கிறது. இத்தகை சூழலில் வரும் 2030ம் ஆன்டுக்குள் தமிழ்நாட்டை சுமார் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றுவோம் என திமுக அரசு தெரிவித்துள்ளது, வெறும் பொய் வார்த்தைகள் மட்டுமே என தெரிவித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் திமுக அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீட்டுகளை விட்டுவிட்டு, ஜப்பான் , சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு முதல்வர் முக ஸ்டாலின் சென்று முதலீட்டை ஈர்க்கிறார் என தம்பட்டம் அடித்து கொள்வதாக விமர்சனம் செய்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. தமிழகத்தில் வரவேண்டிய சர்வதேச நிறுவனங்கள், வேறு மாநிலங்களுக்கு சென்றதால், சுமார் 1,46,000 பேருக்கு கிடைக்க வேண்டிய நேரடி வேலை வாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பாக வேதாந்தா-ஃபாக்ஸ்கானில் இருந்து மட்டும் 100,000 நபர்களுக்கும், ஹ்வாசுங்கில் இருந்து 20,000 நபர்களுக்கு, மைக்ரானில் இருந்து 3,000-5,000 நபர்களுக்கு, கூகிள் AI மை யத்தில் இருந்து 2,000-3,000 நபர்களுக்கு மற்றும் பிற நிறுவனங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பேர் வேலை வாய்ப்பு இழப்பு தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. வேதாந்தா-ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் சுமார் ₹1.54 லட்சம் கோடி முதலீடு செய்ய இருந்தது, இந்தியா வரலாற்றில் மிக பெரிய முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தொடங்க பட இருந்த இந்த தொழிற்ச்சாலை, கடந்த 2022ம் ஆனது குஜராத் அரசுடன் புத்துணர்வு ஒப்பந்தம் போட்டு, கடந்த 2023ம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே இடத்தை தேர்வு செய்து கொண்டது. இதனால் மட்டும் சுமார் 1 லட்சம் நபர்களுக்கு தமிழகத்தில் கிடைக்க இருந்த வேலை வாய்ப்பு பறிபோகி இருக்கிறது. தமிழ்நாட்டை இலக்காக கொண்டு வேதாந்தா-ஃபாக்ஸ்கான் நிறுவனம் தொழிற்ச்சாலையை தமிழகத்தில் தொடங்க இருந்த நிலையில், வேதாந்தா-ஃபாக்ஸ்கான் நிறுவனம் கோரிய நிலம் மற்றும் மானியத்தை தமிழக அரசு வழங்க மறுத்ததால், மிக பெரிய இந்த நிறுவனம் குஜராத் மாநிலத்திற்கு சென்று விட்டது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் சுமார் 6770 கோடி முதலீட்டில், மைக்ரான் டெ க்னாலஜி நிறுவனமும் குஜராத்தில் அகமதாபாத் அருகே தொடங்க இருக்கிறது. இது இதற்கு முன்பு தமிழகத்தில் தொடங்க தீவிரமாக இடத்தை தேர்வு செய்ய ஆராய்ந்து வந்தது குறிப்பிட்டத்தக்கது. #மாரிதாஸ் fans club
மாரிதாஸ் fans club - र 5 TMEN र 5 TMEN - ShareChat