குவைத்தில் இந்தியாவை சேர்ந்த வீட்டு பணிப்பெண் மாரடைப்பால் மரணமடைந்தார்:
குவைத்தில் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்துவந்த கேரளா மாநிலம் இடுக்கியை அடுத்த காஞ்சியார் பகுதியை சேர்ந்த ரெஷ்மி(47), அமிரி மருத்துவமனையில் வைத்து மரணமடைந்தார். தன்னுடைய முதலாளி வீட்டில் வைத்து வேலைக்கு இடையே திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவரை மீட்ட முதலாளி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்,ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இவருடைய கணவர் பெயர் விஸ்வநாதன் என்பதாகும். உயிரிழந்த ரெஷ்மியின் உடலை இந்தியா கொண்டு செல்ல தேவையான ஆவணப்பணிகளை ஓஐசிசி கெயர் குழுவின் தலைமையில் நடைபெற்று வருகின்றன. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️


