ShareChat
click to see wallet page
search
தேவக்கோட்டை "110 ஆண்டுகளாய் ஒளிரும் காசி ஸ்ரீ விசாலாட்சி சன்னிதான பாவைவிளக்கு" "தேவகோட்டை வைரவன் கோயில் வீர.பள.லெட்சுமணன் செட்டியார் மனைவி லெட்சுமி ஆச்சி பெயரில் செய்து வைத்த பாவை விளக்கு" 22-06-1915 அன்று செய்து வைத்ததாக வெண்கல சிலையில் பொறிக்கப்பெற்றுள்ளது. நகரத்தார் பெண்மணி நகரத்தார் சமூகத் திருமாங்கல்யத்துடன் (அதில் பவளம்,பொட்டு,தாயத்து) கண்ட சரம், ஏழுகல் தோடு மற்றும் இதர பல செட்டிநாட்டு அணிகலன்கள் உடன் விளக்கு ஏந்தி நிற்கும் பாவை உருவம் மிகவும் அழகு மிளிர்கிறது. தமிழ்க் கல்வெட்டுப் பொறிக்கப்பெற்று காசி விசாலாட்சி சன்னிதானத்தில் இது மிளிரும் காட்சி மிகவும் உணர்வுப்ரபூர்வமாக உள்ளது. #திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துகள். #திருவண்ணாமலை கார்த்திகை தீபம் #💐 திருவண்ணாமலை கார்த்திகை தீபம் #மஹா பரணி தீபம் 🔥🔥 #மகா பரணி தீபம்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துகள். - ShareChat