ShareChat
click to see wallet page
search
சென்னை போன்ற பகுதிகளிலிருந்து திருச்சி வருபவர்கள் கவனித்திருப்பீர்கள். திருச்சிக்கு வருவதற்கு முன் இரண்டு பெரிய ஆறுகளை கடக்க வேண்டும். அவற்றில் பெரியது கொள்ளிடம். மற்றொன்று காவிரி. நான் சிறு வயதிலிருந்தே இரண்டு பாலங்களையும் கடக்கும் போது கவனிக்கும் ஒன்று: "ஏன் எப்போதும் கொள்ளிடம் வறண்டே கிடக்கிறது; காவிரியில் சிறிதாவது தண்ணீர் இருக்கிறது?!". வெள்ளம் அல்லது மழைக்காலம் தவிர்த்து கொள்ளிடம் பாவமாக வறுமையில் வாடுவது போல் இருக்கும்!! 😄😄😂 இதற்கான விடை சில நாட்கள் முன்பு கிடைத்தது!! ******************************************************. சில நாட்களுக்கு முன்பு திருப்பராய்த்துறை கோவிலுக்கு சென்றேன். அது கரூர் போகும் வழியில், முக்கொம்பு அணை சுற்றுலா மையத்திலிருந்து ஒரு ஸ்டாப் தள்ளி இருக்கிறது. ஆதிகாலத்தில் காவிரி ஆற்றில் எப்போதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டவாறே இருந்திருக்கிறது. ஆகையால், அதை இரண்டாக பிரித்து காவிரி, கொள்ளிடம் என்று இரண்டாக ஆக்கியிருக்கின்றனர். அந்த இடத்தில் உள்ள அணையே முக்கொம்பு அணை. அது தண்ணீரை காவிரிக்கே எப்போதும் திருப்பி விடுகிறது!! வெள்ளம் அணை மீறினால் தான் கொள்ளிடத்திற்கு தண்ணீர்!! (கர்நாடகாவில் வேறு அணைகள் வந்து விட்டதால் இந்த நிலை!). ஆனால், இந்த பதிவு கொள்ளிடத்தின் வறுமை பற்றியதல்ல!! சைவத்திலும், சிவ தத்துவத்திலும் இந்த நிலைமை!! *********************************************** ஆம், ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் சிவ தத்துவம் மிகவும் மேலோங்கி (காவிரியை போல் அடக்க இயலா!!) இருந்திருக்கிறது. ஆகையால், சிவ தத்துவம் இரண்டாக உடைக்கப் பட்டுள்ளது. ஒன்று, சித்தாந்த சிவ தத்துவம் (உலகம் உண்மை என்பதை சார்ந்தது. அற வாழ்க்கையை போதிப்பது.) இரண்டாவது மாயை தத்துவத்தை சார்ந்த சிவ தத்துவம். எதனால் இந்த யூகம்?! ************************************************ ஒரு முறை குணசீலம் பெருமாள் கோவில் சென்றிருந்தேன். போவதற்கு முன் அதன் முன்னதாக ஒரு சிவபெருமான் கோவில் உள்ளது. உள்ளே சென்றால் அந்த பாழடைந்த சிவன் கோவில் அவ்வளவு சான்னியத்துடன் இருந்தது!! குணசீலம் பெருமாள் கோவிலுக்காக இல்லாவிட்டாலும் இந்த சிவன் கோவிலுக்காக குணசீலம் வர வேண்டும் என்று தோன்றும் அளவுக்கு!! பிறகு, தல புராணத்தை படித்தால், அது காவிரி வரலாறு போன்றது!! ஒரு முறை சிவபெருமானின் கோவில் இரண்டாக பிளந்து விட்டதாம். ஒன்று, திருப்பராய்த்துறை சிவன் கோவில். இரண்டாவது இந்த "தார்மீக நாதர்" கோவில். முன்பு மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இப்போது பல வருடங்களாக நன்கொடை இல்லாத காரணத்தால் தொடர்ந்து திருப்பணி நடந்து வருகிறது. நான் கூட ஏன் அறநிலையத்துறை இந்த கோவிலுக்கு நிதி வழங்க கூடாது என்றேன். கடைசியில் பார்த்தால் அறநிலையத்துறை குணசீலம் பெருமாள் கோவிலுக்கு பல கோடி நிதி ஒதுக்கி இருக்கிறது. அவர்கள் ஏற்கனவே இருந்த முன் மண்டபத்தை மீண்டும் இடித்து கட்டத் தொடங்கி உள்ளனர்!! அருகில் உள்ள இந்த கோவிலோ கொள்ளிடம் போல் வறுமையில் உள்ளது!!😄😂. ************************************************ தல புராணம் கூறுவது போல இந்த கோவில் அதே நேர்கோட்டில் அமைந்துள்ளது!! நான் திருப்பராய்த்துறை சென்று விட்டு பேருந்தில் ஒரு ஸ்டாப் கடந்து முக்கொம்பு வந்து, சுற்றுலா மையம் வழியாக இரண்டு ஆறுகளையும் கடந்து காவிரியின் இந்த கரைக்கு வந்து மீண்டும் பஸ் பிடித்தால், அதே டிஸ்டன்ஸ் - ஒரு ஸ்டாப் மேலே கடந்தால் இந்த தார்மீக நாதர் கோவில் இந்த கரையில் அமைந்து உள்ளது!!! ************************************************* நான் திருப்பராய்த்துறையை தான் சைவத்தை சார்ந்த "அறம் சார்ந்த சிவ தத்துவத்தை" சேர்ந்ததாக நினைத்து வந்தேன். அப்படியானால் "இந்த பாதி சிவனுக்கு" ஏன் "தார்மீக நாதர்" என்று பெயர்?! தார்மீகம் என்றால் அறம் சார்ந்தது என்று அர்த்தம்!! அழிக்கும் தத்துவத்தை சார்ந்த ஆகம, அத்வைத சிவ தத்துவமா அல்லது அறம் சார்ந்த அன்பே சிவம் என்ற சைவ சித்தாந்த சிவதத்துவமா? எது இன்று உலகில் மேலோங்கி நிற்கிறது?! (ஒரு வேளை திருப்பராய்த்துறை சிவன் தாருகாவன முனிவர்களை காப்பாற்றிய சிவனோ? ஆகையால் தான் பிட்சாடனர் என்ற பெயர் இல்லையோ?!😄😄😂) *********************************************** எனக்கென்ன தோன்றுகிறது என்றால், அந்த காலத்திலேயே, சிவ தத்துவம் இரண்டாக பிரிந்து, அறம் சார்ந்த தத்துவம் வைணவத்திற்கு தரப்பட்டு விட்டது !! சிவபெருமான் "அறன்" அல்ல!! மாறாக "அரன்" - அதாவது பக்தர்களுக்கு அரணாக நிற்பவன் - அழிக்கும் தத்துவத்தை தான் குறிக்கிறது!! இதனால் தான் முருகனும் வைணவத்தை சார்ந்த வரலாறு இருக்கிறது!! ஆகையால் தான் காவிரிக்கு இந்த கரையில் உள்ள தலத்தில் சிவன் கோவில் சிதிலமடைந்தும், வைணவ திருக்கோவிலாக குணசீலன் பெருமாள் கோவில் பெரும் புகழ் பெற்றும் இருக்கிறது என்று நினைக்கிறேன்!! நான் முதல் முறை இந்த சிவன் கோயில் சென்ற போது சிவபெருமான் கூறியது போல் இருந்தது - "நான் தான் இங்கு முன்பு புகழ்பெற்ற கோவிலாக இருந்தேன்; ஆனால் அது இப்போது பெருமாள் கோவில் ஆகிவிட்டது!!" - உண்மை தான் போலிருக்கிறது!! **************************************************** #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
ஆன்மீக வாழ்க்கை - தார்மீக நாதர்திருக்கோயில் தார்மீக நாதர்திருக்கோயில் - ShareChat