* *🌺 இது உங்கள் வாழ்வுக்கான நல் வார்த்தை 10/10/2025:*
*உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்” ஏசாயா 54:13*
**பிரியமானவர்களே!* *தேவன் இல்லாத குடும்பங்களில், அல்லது, தேவனை முன்பாக வைக்காத குடும்பங்களில் எப்பொழுதும் பிரச்சனைகளும், சண்டைகளும், ஓலங்களும் உண்டாகிக் கொண்டே இருக்கும். பிள்ளைகள், இந்த உலகத்தின் பிடியில் சிக்கி, சமாதானம் இல்லாமல் உலகம் செல்லும் வழிகளில் சென்று தங்கள் ஜீவியத்தைக் கெடுத்துக்கொண்டு, குடும்பத்திற்கும் அவ பெயரை ஏற்படுத்துகிறவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட குடும்பங்களில் சமாதானம் இல்லாமல் அந்த குடும்பமே தத்தளித்துக்கொண்டிருக்கும். ஆனால் தேவனுக்கு முன்பாக இருக்கும் குடும்பமோ, சமாதானம் பெற்று, அதில் பெருகும். இருக்கும் குடும்பத்தில் சமாதானம் பெரிதாக இருக்கும். இதுதான் தேவனுடைய நிறைவான ஆசீர்வாதம். இந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள ஒவ்வொரு நாளும் தேவனே உமக்கு முன்பாக எனது குடும்பம் இருக்க வேண்டும் என்று ஜெபித்து, தேவனுடைய வழிநடத்துதலின்படி நமது குடும்பத்தை நடத்துவோம். நமது குடும்பம் ஆசீர்வாதமான குடும்பமாக விளங்கும். ஆமென்*
*🛐உங்களுக்காக ஜெபிக்கிறேன்*✍️
**PR PAUL HAGIN.*
*NEW COVENANT STONE MINISTRIES*
📞
*+919524304072* #💪🏽மோட்டிவேஷனல் வாழ்த்து💐 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #trending today Christianity

