🪔 🌲புpரட்டாசி ஸ்பெஷல் 05🌲
********************************
♦️♦️நாலாயிர திவ்ய பிரபந்தம்
**************************************
🚩வாரா வருவாய் வருமென் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்,
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?
🌹பதவுரை
🔹வாரா அரு ஆய் வரும் என் மாயா= திருவுருவ த்தோடு வாராமல் அரூபியாய் உள்ளே வந்து தோன்றுகின்ற என் மாயவனே!
🔹மாயாமூர்த்தியாய் ஆராஅமுது ஆய்அடியேன் ஆவி அகமே தித்திப்பாய் = ஒரு நாளும் அழியாத தெய்வீக மங்கள உருவை உடையவ னே, எவ்வளவு அனுப வித்தாலும் தெவிட்டாத அமுதமாய், என் உள்ளுக்குள்ளே தித்தித்திருப்பவனே!
🔹தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் திரு குடந்தை ஊரா = தொலையாத பாவ ங்களும் தொலையும்படியாக அடியேனை ஆண்டருளி னவனே திருக்குடந்தைப் பதியோனே!
🔹அடியேன் உனக்கு ஆள்பட்டும் இன்னம் உழல் வேனோ =அடியேன் உனக்கு அடிமைப் பட்டும் இன்னமும் மனக் கிலேப்படுவேனோ.
🌹விளக்கம்:
🔺இப்பாசுரத்தில் எம்பெருமான் தன்னுடைய கோரிக்கையை நிறைவேற்றி அரூபியாய் உள்ளே வந்து தோன்றியதை கூறுகிறார்.
🔺அதோடு தன் பாவங்களை இல்லாமல் செய்த தையும் கூறுகிறார். திருவுருவத் தோடு வாரா மல், அரூபியாய் வந்து தோ ன்றுகின்ற, அடியே னுடைய மாயவனே!
🔺ஒருநாளும் அழியாத(மாயாத) தெய்வீக மங்கள உருவை உடையவனே.(முதல் அடியில், முதலில் வரும் “மாயா” என்ற சொல் “மாயவ னே” என்றும் அடுத்து வரும் அதே சொல் “மாயாத” என்றும் பொருள்படும்).
🔺எவ்வளவு அனுபவித்தாலும் தெவிட்டாத அமுத மாய் என் உள்ளே தித்தித்திருப்பவ னே! தொலையாத பாவங்களும் தொலை யும்படியா க அடியேனை ஆண்டருளினவ னே, திருக்குட ந்தைப்பதியோனே!
🔺அடியேன் உனக்கு அடிமைப்பட்டும் இன்னமும் மனக் கிலேப்படுவேனோ.
🌹ஓம் நமோ நாராயணாய...
#🛕புரட்டாசி மாதம் வழிபாடு #🙏பெருமாள் #🙏ஆன்மீகம் #அர்ச்சனா ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் 💝🙏 #🤔 ஆன்மீக சிந்தனைகள்