ShareChat
click to see wallet page
search
#கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️ ஒரு ஊர்ல ஒரு ராஜா கதைசொல்ல ஒரு வீட்டுல கூட ஒரு பாட்டி யில்லை இப்போது *இல்லாமை* 🍂🍂🍂🍂🍂🍂 தவறுக்கு மன்னிப்பும் மன்னிப்புக்கு நன்றியும் சொல்பவனைவிட நன்றிக்கும் நன்றி சொல்லி நிற்பதே *பண்புடைமை* 🍂🍂🍂🍂🍂🍂 மழலைகள் மிதித்து மிதித்து விளையாட முதுகுவலியில் குப்புறபடுத்த நிலம் மனநிம்மதியில்// *நிறைவுடைமை* 🍂🍂🍂🍂🍂🍂 மலைச்சாரலில் மழைச்சாரலில் இளையராஜா பாடல்கேட்டபடியே... ஏகாந்தத்தில் பேருந்து வாகனம். *மகிழ்வுடைமை* 🍂🍂🍂🍂🍂🍂 எத்தனை முறை நீ சரியாகக் கூட்டிப் பெருக்கி காட்டினால்கூட உன்னை சிறந்த கணிதமேதை என மாட்டேன். வறுத்தத்தில் வாத்தியார் வீட்டு விளக்குமாறு *வறுத்தமுடைமை* 🍂🍂🍂🍂🍂🍂 பாதுகாப்பாய் பலநாள் கட்டிவைத்து வளர்ப்பதெல்லாம் ஓர் நாள் வெட்டுவதற்குத்தான் புரியாத ஆடு பாசத்தில் முதலாளியோடு. *அறியாமை* 🍂🍂🍂🍂🍂🍂 கவிதை மழை அ. நவஜோதி✍️
கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️ - ShareChat