*ஸ்ரீராம கர்ணாம்ருதம் - ஸ்லோகம் 28*
ராஜீவாய தலோசனம் ரகுவரம் நீலோத்பலஸ்யாமலம்
மன்தா ராஞ்சிதமண்டபே ஸுலலிதே ஸௌவர்ணகே புஷ்பகே
ஆஸ்தானே நவரத்னராஜிகசிதே ஸிம்ஹாஸனே ஸம்ஸ்திதம்
ஸீதாலக்ஷ்மணலோகபாலஸஹிதம் வன்தே முனீன்த்ராஸ்பதம்
*தாமரைப்பூ போல நீண்ட கண்களையுடையவனும், நீலோத்பவ புஷ்பம் போல் நீலவர்ண மேனியுடையவனும், மந்தாரபுஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் அழகான சுவர்ணமயமான புஷ்பகத்தில், தர்பார் மண்டபத்தில் நவரத்னங்களினால் இழைக்கப்பட்ட சிம்ஹாஸனத்தில் வீற்றிருப்பவனும், மஹரிஷிகளால் அடையத்தக்க ஸ்தானமாயிருப்பவனும், ஸீதா தேவி, லக்ஷ்மணன், இந்திராதி லோகபாலாள் முதலிய பேர்களுடன் கூடியவனுமாகிய ரகு சிரேஷ்டனாகிய ஸ்ரீராமனை யான் வணங்குகிறேன்.* 🚩🕉🪷🙏🏻 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🙏சீதா ராமர் #🏹ராமாயணம் 📚 #இராமாயணம் மகாபாரதம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்


