ShareChat
click to see wallet page
search
கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்று, திரும்ப செலுத்த முடியாத ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, "கூட்டுறவு நிறுவனங்களில் 6 பவுன் வரை அடகுவைத்து பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி" செய்யப்படுகிறது. #🥇நகைக்கடன் தள்ளுபடி🥳
🥇நகைக்கடன் தள்ளுபடி🥳 - 2 த . நா.ச.பேஎண் : 04 நாள் : 26.02.2021 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் .110 - ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை -26.22021 மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே , 2019-20ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின . தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் இருந்ததால் , மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியது . மேலும் , கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக , மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி , தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது . இந்நிலையில் , கொரோனா காலத்தில் ஏற்பட்ட குடும்ப நிதி நெருக்கடியை சமாளிக்க ஏழை , எளிய மக்கள் , விவசாய தொழிலாளர்கள் கூட்டுறவு நிறுவனங்களில் தாங்கள் பெற்ற நகைக்கடனை திரும்ப செலுத்துவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர் . கொரோனா தொற்று ஓரளவு குறைந்துள்ள போதிலும் , இயல்பான பொருளாதார நடவடிக்கைகள் முழுமையாக மீளவில்லை . இந்நிலையில் , விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை , எளிய குடும்பங்கள் நகைக்கடன் பெற்று அதைத் திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலையை கருத்தில் கொண்டும் , இதுகுறித்து பெறப்பட்ட கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்தும் , பொருளாதார வல்லுநர்களின் கருத்துப்படியும் , கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பினால் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்று திரும்ப செலுத்துவதில் சிரமத்திற்குள்ளான ஏழை எளிய மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக மாண்புமிகு அம்மாவின் அரசு , கூட்டுறவு நிறுவனங்களில் 6 பவுன் வரை அடகு வைத்து பெற்ற நகைக்கடன்களை தள்ளுபடி செய்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன் . வெளியீடு : இயக்குநர் , செய்திமக்கள் தொடர்புத்துறை , சென்னை -9 இந்நிலையில் , விவசாயமும் பாதிப்புக்கு உள்ளாகியதுடன் , தொடர்ந்து ஏற்பட்ட நிவர் , புரெவி போன்ற புயல்களும் , அதைத் தொடர்ந்து , சென்ற மாதம் பருவம் தவறிப் பெய்த கடும் மழையும் , பெருத்த பயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியதால் , கடன் பெற்று பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் பெரும் அல்லலுக்கு உள்ளாகினர் . இப்பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை காக்க மாண்புமிகு அம்மாவின் அரசு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2,500 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு , கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 இலட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை எடுத்து , தமிழ்நாட்டு மக்களை கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்திலிருந்து படிப்படியாக மீட்டு வருகின்றது . - ShareChat