திருநெல்வேலி ஸ்பெஷல் சோளக்காடியும் கருவாடு குழம்பும் | Village Cooking Chola kaadi karuvatu kulambu
பெரியம்மா செய்த திருநெல்வேலி ஸ்பெஷல் சோளக்காடி சாப்பிடலாமா
காடி என்பது புளித்த சோளச் சோறு.
அந்தக்காலத்தில் திருநெல்வேலி மாவட்ட கிராமங்களில் விவசாயிகளும், கூலித் தொழிலாலிகளும் உடல் வலுவிற்கும், உழைப்பினால் ஏற்பட்ட சோர்வை நீக்கி புத்துணர்ச்சி தரவும், பசியை போக்கவும், சிறு தானிய வகைகளான.. கேழ்வரகு, கம்பு, சோளம், குதிரைவாலி, தினையரிசி, சாமை, வரகு, காணம் போன்றவற்றை தங்கள் உணவாகக் கொண்டிருந்தனர்.
சோளக்காடி, கம்மங்கஞ்சி, சோளச்சோறு, காணத்துவயல், கேப்பைக்களி, உளுந்தங்களி, வெந்தயக்காடி, இந்த உணவு வகைகளை நம் நாக்கு என்றும் மறவாது. #👩🏼🍳 சமையல் குறிப்பு

