ShareChat
click to see wallet page
search
மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த ஏழை, எளிய பெண்களின் துயர் துடைக்க, அவர்கள் "கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பெற்று நிலுவையில் உள்ள கடன்கள் தள்ளுபடி" செய்யப்படுகிறது. #🤷‍♀️மகளிர் சுயஉதவி கடன் தள்ளுபடி🤗
🤷‍♀️மகளிர் சுயஉதவி கடன் தள்ளுபடி🤗 - 2 த . நா.ச.பேஎண் : 05 நாள் 26.022021 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் .110 - ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை- 26.2.2021 மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே , கிராமப்புறங்களிலும் , நகர்ப்புற குடிசைப் பகுதிகளிலும் வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெறும் பங்காற்றி வருகின்றன . மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் , பெண்கள் சுய உதவிக் குழுக்களை அமைத்து , அவர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு மகத்தான வழியை வகுத்துத் தந்தார் . இன்றைய அளவில் தமிழ்நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன . இக்குழுக்களில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர் . இக்குழுக்களில் உள்ள பெண்கள் , பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் . இவர்கள் தங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும் , சிறுதொழில் செய்யவும் , கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று வருகின்றனர் . கடந்த 2019 பிப்ரவரி முதல் கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பரவி , மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்தது . இதன் தாக்கம் இந்தியாவிலும் ஏற்பட்டது . தமிழ்நாடும் இதன் பாதிப்புக்கு உள்ளாகி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது . இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு , தேவைப்படும் தளர்வுகளுடன் அது தொடர்ந்து அமலில் உள்ளது . நோய்த் தொற்றாலும் , கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாலும் பாதிக்கப்பட்ட மக்களின் சிரமங்களை குறைக்க , நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி , பருப்பு போன்றவை அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லாமல் வழங்கியதுடன் , ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரொக்க உதவியும் , பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ உதவிகளையும் மாண்புமிகு அம்மாவின் அரசு வழங்கியது . இந்நிலையில் , கொரோனா தொற்று காலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் , சுய உதவி குழுக்கள் தாங்கள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் பெற்ற கடனை திரும்ப செலுத்த இயலாத நிலை உள்ளதாகவும் , அவர்களின் துயரை துடைக்க தமிழ்நாடு அரசு தங்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கைகள் வைத்துள்ளனர் . இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு , சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஏழை , எளிய பெண்களின் துயர் துடைக்க , அவர்கள் கூட்டுறவு வங்கிகளிலும் , கூட்டுறவு சங்கங்களிலும் பெற்று நிலுவையில் உள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதை இப்பேரவைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் . வெளியீடு இயக்குநர் , செய்திமக்கள் தொடர்புத்துறை , சென்னை -9 - ShareChat