Jayakannan
ஜோதிடத்தில் 1, 4, 7, 10 மற்றும்
5,9 மிக மிக முக்கியம். !!!!
ஏன்.?.
கேந்திரம் மற்றும் திரிகோண பாவகமான
லக்னம் வலிமை அடைந்த ஜாதகர்..
தன்னம்பிக்கையாளராக திறமைசாலியாக ஆக்கும்
தன்னுடைய சுய முயற்சியால் ஜாதகரை முன்னேற வைக்கும்.
4 ஆம் பாவகம் வலிமை அடைந்த ஜாதகர்.
வீடு வாகனம் சொத்து சுகங்களை பெற்று.
தாயாரின் ஆதரவுடன்
மகிழ்ச்சியான வாழ்க்கையை
வாழ வைக்கும்.
திறமையும் இல்லை...
வீடு வாகனம் இல்லை..
என்றாலும்..
ஏழாம் அதிபதி வலிமை அடைந்த ஜாதகர்.
திருமணத்திற்கு பிறகு மனைவியின் மூலம்
மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வைக்கும்.
1,4,7 மூன்றுமே சரியில்லை என்றாலும்...
10 ஆம் பாவகம் நன்றாக இருக்கும் பட்சத்தில்...
தொழிலில் மேன்மையான நிலையை அடைந்து
அதன்மூலம் தனக்குத் தேவையானதை பூர்த்தி செய்து கொள்வார்.
சுருக்கமாக...
1,4,7,10 என்பது
மனிதனுக்கு இரண்டு கை
இரண்டு கால்களை போன்றது.
அடுத்து....
5 ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம்.
9 ஆம் இடம் பாக்கிய ஸ்தானம்
இந்த இரண்டும் அதிர்ஷ்ட ஸ்தானங்கள்.
ஒரு ஜாதகத்தில்
5,9 சிறப்பாக அமைந்து விட்டால்...
பெயர் புகழுடன் அதிர்ஷ்டத்தை அனுபவிப்பதற்கு என்று பிறந்தவர்.
இதில்..
5 ஆம் இடம் ஆட்சியாக அமைந்து விட்டால்..?
அறிவு ஞாபக சக்தி துல்லியமாக முடிவெடுக்கும் திறன்.
கண்களால் பார்த்ததை கைகளால் செய்ய வைக்கும் கலை.
மனிதர்கள்
சமுதாயம்
வாழ்க்கை
பண்பாடுகள்
வேதம்
ஜோதிடம்
கதை
கட்டுரை
போன்றவற்றை கற்பனை கலந்த உணர்வு பூர்வமாக
தாய்மொழியின் வழியாக அழகு நடையுடன் வெளிப்படுத்தக்கூடிய கலை வடிவான....
இலக்கியத்தில்.!!!
தேர்ச்சி பெற வைப்பது.
மேலும்...
கௌரவ பதவிகளை தருவது.
சிறந்த புத்திரர்களை தருவது.
குலதெய்வ அருள் கிடைப்பது.
மற்றும்...
கணிதத்தில் தேர்ச்சியும்...
ஜோதிடத்தில்
ஆர்வமும் திறமையும்
இயற்கையிலேயே அமைவது.
போன்றவற்றால் ஜாதகரை
பெயர் புகழ் மிக்க நபராக
அதிர்ஷ்டசாலி ஆக்கும்.
பாக்கிய ஸ்தானம் எனும்
9 ஆம் இடம் ஜாதகத்தில்
சிறப்பாக அமைந்து விட்டால்.?
குறைந்த உழைப்பு நிறைந்த வருமானம்.
சொத்து சேர்க்கக் கூடிய ஐடியாவை...
சொத்தைப் பெருக்கக் கூடிய ஐடியாவை...
யாராவது ஒருவர் வலிய வந்து சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
உலக வரைபடத்தில் கால் தடம் பதிக்காத இடமே இல்லை என்கிற அளவிற்கு
உலகத்தை சுற்றிப் பார்க்கும் யோகம்.
பூர்வீக சொத்துக்கள் பஞ்சாயத்துகள் வில்லங்கங்கள் இன்றி கைக்கு கிடைப்பது.
தந்தையின் ஆசியும்.
குலதெய்வ அருளும்.
நிரம்பி வழியும்.
சுருக்கமாக..
பாசத்திற்கும் பஞ்சமில்லை பணத்திற்கும் பஞ்சமில்லை
அனுபவிக்காத நாளும் இல்லை.
என சொல்லலாம்.
முடிவுரை...
ஒரு ஜாதகத்தில்
1,4,7,10 இல் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு
நன்றாக இருந்தால்.?
மீதம் உள்ளதை...
ஜாதகர் தனது சொந்த முயற்சியின் மூலமாக.
தனது சொந்த வழிகாட்டுதலின் படி...
பூர்த்தி செய்து கொண்டு
வாழ்க்கையை சிறப்பாக வாழ்வார்.
5,9 இல் ஏதேனும் ஒன்று
அல்லது இரண்டும்
நன்றாக இருந்தால்.?
இறைவன் அருகில் அமர்ந்து வழிகாட்டுவதைப் போல..
இறைவனின் வழிகாட்டுதலின்படி
அனைத்தையும் எளிதாக அடைவது மட்டுமல்லாமல்.
அனுபவிக்கக்கூடிய
அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பார்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Contact
WhatsApp only
78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍