ShareChat
click to see wallet page
search
https://www.facebook.com/share/v/18fdabZYmx/ #en. padipu #😔தனிமை வாழ்க்கை 😓 #👆என் இனிய தனிமையே😎
en. padipu - ShareChat
११ ह व्ह्यू · ३१५ प्रतिक्रिया | இப்பாடல், உருவான கதை மிகவும் சுவாரஸ்யமானது. சுஜாதா அறிமுக நடிகையாக அப்படத்தில் நடித்தார். அவரது அண்ணனாக, ஜெய்கணேஷ், எந்நேரமும் குடித்துவிட்டு, வீட்டிற்கு பொறுப்பு இல்லாத பிள்ளையாக சுற்றுபவர். அவருக்கு ஒரு பாடல் தரலாம் என முடிவு செய்தார் பாலசந்தர். எம்.எஸ்.பெருமாள் எழுதிய நாவல் தான், அவள் ஒரு தொடர்கதை படமாக உருவானது. எம்.எஸ்.பெருமாள், அந்த படத்தில் கதாசிரியராகவும் பணியாற்றினார்.பெருமாளுக்கு பாலசந்தரின் முடிவு விசித்திரமாக இருந்தது. நமது கதையில், ஜெய்கணேஷ் கதாபாத்திரம் சாதாரண கதாபாத்திரம் தான். அதற்கு எதற்கு பாடல், தவிர்த்து விடுங்கள் என்று, தன்னுடைய கருத்தை பாலசந்தரிடம் தெரிவித்தார் பெருமாள். அதற்கு பாலசந்தரம் சொன்னார், ‘பெருமாள்… இந்த பாடலை எழுதப் போவது, நீங்களோ, நானோ அல்ல.. கவியரசு கண்ணதாசன் எழுதப்போகிறார். பாடல் நன்றாக வந்தால் வைத்துக் கொள்வோம், நன்றாக இல்லை என்றால், எடுத்துவிடுவோம்’ என்று கூறியுள்ளார். அதற்கு பெருமாளும் ஒப்புக் கொண்டார். தயாரிப்பாளர் அறையில் கம்போசிங் நடக்கிறது. எம்.எஸ்.வி., ட்யூன் போட்டுவிட்டார். இப்போது கண்ணதாசனிடம் காட்சிகளை விவரிக்கிறார் பாலசந்தர். கண்ணதாசனுக்கு வார்த்தையே வரவில்லை. எம்.எஸ்.வி.,யிடம் கண்ணதாசம் சொன்னாராம், ‘ஏங்க.. அண்ணன், தங்கையை திட்டுவது போல காட்சி, நீங்க என்னடானா.. மெலோடிய ட்யூன் போட்ருக்கீங்க.. இதுக்கு எப்படி எழுதுறது?’ என்று கேட்டாராம். இதை எழுதுவதற்கு தான் உன்னை அழைத்தோம்.. நீர் மட்டும் தான், எந்த காட்சிக்கும் எழுத முடியும்..’ என்று எம்.எஸ்.வி., சொல்லியுள்ளார். அதை காதில் வாங்காமல், கண்ணதாசம் விளையாடிக் கொண்டே இருந்துள்ளார். வழக்கமாக அவர் செய்யும் சேஷ்டைகள் தான். கடுப்பான எம்.எஸ்.வி., ஆர்மோனிய பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. ‘பசிக்குது ஏதாவது வாங்கிட்டு வரச் சொல்லுங்க’ என்று தயாரிப்பாளரை வம்பிழுத்துள்ளார் கண்ணதாசன். தயாரிப்பாளருக்கு ஒரே கடுப்பு. கம்யூசிங்கில் பாடல் தராமல், இசையமைப்பாளரையும் அனுப்பிவிட்டு, சாப்பாடு கேட்கிறாரே என்று. இருவரும் செல்ல சண்டை போட்டுக்கொள்கிறார்கள். அவர்கள் இருவரும் நண்பர்கள் வேறு. ‘நீ இப்படியே விளையாடிட்டு இருந்தா, உன்னை தூக்கி வீதியில் போட்ருவேன்..’ என்று தயாரிப்பாளர் சொல்ல, ‘என்னை வீதியில் போட்டா சும்மா இருப்பேனா.. வீதி என்ன சாதாரணமாடா, வீதி என்பது சாதாரணமாடா? தெய்வம் வந்த வீடுடா.. அது இருக்குலா, அதில் நீ என்னடா? நான் என்னடா?’ என்று தயாரிப்பாளரிடம் கண்ணதாசன் சொல்ல, அது தான் பல்லவி ஆனது. அதற்குள் எம்எஸ்வி., வீட்டுக்கு போன் போக, காரில் இருந்து அவர் இறங்குவதற்குள் மீண்டும் தயாரிப்பாளர் அறைக்கு வந்தார். அதன் பிறகு தான், அவரது ட்யூனுக்கு கண்ணதாசனின் வரிகள் அமர, ‘தெய்வம் தந்த வீடு.. வீதி இருக்கு பாடல்…’ உருவானது. | Prashantha Kumar
இப்பாடல், உருவான கதை மிகவும் சுவாரஸ்யமானது. சுஜாதா அறிமுக நடிகையாக அப்படத்தில் நடித்தார். அவரது அண்ணனாக, ஜெய்கணேஷ், எந்நேரமும் குடித்துவிட்டு, வீட்டிற்கு...