ShareChat
click to see wallet page
search
#AL QURAN. #Al-Quran #al-quran... ## al quran #al quran
AL QURAN. - பாகம் : 26 அத் : 51 அஸ்ஸாரியாத் 20-23 உறுதியாக நம்புபவர்களுக்கு பூமியில் பல சான்றுகள் உள்ளன . 21 ஏன் , உங்களிடத்திலும் கூட ! உங்களுக்குப் புலப்படுவதில்லையா , என்ன ? 22 வானத்தில்தான் இருக்கின்றன , உங்கள் வாழ்வாதாரமும் , உங்களுக்கு வாக்களிக்கப்படுகின்ற வையும் ! 23 வானம் மற்றும் பூமியினுடைய அதிபதியின் மீது ஆணையாக ! திண்ணமாக , இந்த விஷயம் சத்தியமானது ; நீங்கள் பேசிக் கொண்டிருப்பது எவ்வாறு உறுதியானதோ அவ்வாறே இதுவும் உறுதியானது . الدريت ۵۱ وَفِي انْفُسِكُمْ أَفَلَا وَفِي الْأَرْضِ ايْتُ لِلْمُوقِنِينَ ) تُبْصِرُونَ وَفي السَّمَاءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ ) فَوَرَبِّ السَّمَاءِ وَالْأَرْضِ إِنَّهُ لَحَقِّ مِثْلَ مَا أَنَّكُمْ تنطقون و 1. சத்தியம் செய்து சொல்லப்பட்டிருப்பதன் கருத்து இதுதான் : மழை பொழிவதற்கான இந்த மகத்தான விதிமுறை தன்னிகரற்ற ஓர் அமைப்பின்படியும் ஒழுங்குமுறையின்படியும் உங்கள் கண்முன்னே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது . அந்த அமைப்புக்கும் ஒழுங்குமுறைகளுக்கும் பின்னே பல மதிநுட்பங்களும் நன்மைகளும் தெளிவான காரணிகளாக ) செயல்பட்டுக் கொண்டிருப்பதும் உங்களுக்குத் தென்படுகின்றன . அவை பின்வரும் பேருண்மையைக் குறித்துச் சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றன : அதாவது , இவ்வுலகம் ஒரு குறிக்கோளில்லாத அர்த்தமற்ற விளையாட்டுப் பொருளல்ல . இது இலட்சக்கணக்கான , கோடிக்கணக்கான ஆண்டுகளாக முறையற்ற தன்மையில் நடந்து கொண்டிருக்கும் ஒரு விளையாட்டல்ல . மாறாக , உண்மையில் இது முழு விவேகமிக்க ஓர் அமைப்பாகும் . இதில் ஒவ்வொரு பணியும் ஒரு குறிக்கோளுடனும் ஒரு நலனின் அடிப்படையிலும்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது . மனிதனுக்கு பூமியில் அதிகாரங்களை வழங்கி அவற்றை அவன் எப்படிப் பயன்படுத்தினான் என்று அவனிடம் கணக்கு வாங்காமலே அவனை விட்டுவிடுவது இந்த அமைப்பில் சாத்தியமன்று . 2. அதாவது , எவ்வாறு வானத்திலுள்ள மேகங்கள் மற்றும் விண்மீன்களின் உருவங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருக்கின்றனவோ அவற்றிற்கிடையே எந்தவிதமான பொருத்தமும் காணப்படுவதில்லையோ அவ்வாறே மறுமையைப் பற்றி விதவிதமான கருத்துக்களை நீங்கள் கூறிக்கொண்டிருக்கின்றீர்கள் . உங்களில் ஒவ்வொருவருடைய கருத்தும் மற்றொருவருடைய கருத்துக்கு முரண்பட்டதாயுள்ளது . இந்தக் கருத்து மாறுபாடுகளே கீழ்வரும் விஷயத்திற்குத் திட்டவட்டமான ஆதாரமாகும் : வஹி மற்றும் தூதுத்துவத்தைப் புறக்கணித்துவிட்டு மனிதன் தன்னுடையவும் இந்த உலகத்துடையவும் முடிவைக் குறித்து எந்த ஒரு கருத்தை மேற்கொண்ட போதிலும் உறுதியான ஞானம் இன்றியே அதனை மேற்கொண்டான் . மனிதனிடம் இந்த விஷயத்தில் உண்மையிலேயே நேரடியான ஞானத்தைப் பெறுவதற்கான வழிவகை ஏதேனும் இருந்திருந்தால் இத்தனை வேறுபட்ட , ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கைகள் இவ்விஷயத்தில் தோன்றியிருக்க மாட்டா . 3. அதாவது , தமது இந்தத் தவறான கணிப்புகளின் காரணமாக அவர்கள் எந்தக் கதியை அடையப் போகின்றார்கள் என்பதை அறிவதில்லை . ஆனால் மறுமையைக் குறித்து தவறான கருத்தை ஏற்படுத்திக் கொண்டு எந்த வழியை மேற்கொண்டாலும் அது அழிவை நோக்கியே செல்லும் . 4. கூலி கொடுக்கும் அந்நாள் எப்போது வரும் ? என்று நிராகரிப்பாளர்கள் கேட்கிறார்கள் . அந்தக் கேள்வி பினுள்ளேயே பின்வரும் கருத்து தொனிக்கிறது . நாங்கள் அந்த மறுமையை மறுத்துக் கொண்டிருக்க , அதற்கான தண்டனை எங்கள் மீது கண்டிப்பாக விதிக்கப்பட்டிருக்க , அது ஏன் வராமல் இருக்கிறது ? வருவதற்கு ஏன் காலதாமதம் ஆகிறது ? 5. வேறு சொற்களில் கூறினால் ஒருபுறம் அவர்கள் தம் இறைவனின் உரிமையைப் புரிந்துகொண்டும் அதனை நிறைவேற்றிக் கொண்டும் இருந்தார்கள் . மற்றொருபுறம் மக்களின் உரிமைகளையும் நிறைவேற்றி வந்தார்கள் . அல்லாஹ் அவர்களுக்கு அளித்திருந்த வாழ்வாதாரம் குறைவாக இருந்தாலும் சரி , அதிகமாக இருந்தாலும் சரி அதில் தமக்கும் தம் மனைவி மக்களுக்கும் மட்டுமே உரிமையிருப்பதாக அவர்கள் கருதவில்லை . மாறாக நமது இந்தச் செல்வத்தில் உதவி தேவைப்படுகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமையுண்டு என்று அவர்கள் உணர்ந்திருந்தார்கள் . 969 - ShareChat