*இன்று*(21-5-26) *வியாழக்கிழமையில்*
*கர்மவினை போக்கும்* *தட்சிணாமூர்த்தி* *வழிபாடு பற்றிய*
*சிறப்பு பதிவு*!
மதி என்கிற சந்திரனை சூடிய கடவுள்கள் வழிபாடு நமது கர்மவினைகளை போக்கக்கூடியது.
பிறைசூடிய தெய்வங்கள் சிவபெருமானை பிரதிபலிக்கும் தெய்வங்கள் ஆகும்.
அவ்வாறு இருக்கும் தெய்வங்கள் சிவபெருமானின் அம்சம் பொருந்தியவையே.
நமது சிவ வழிபாட்டில் வரும் தடைகளும், இடையூறுகளும்
முதலில் நமது மனதை பாதிக்கக்கூடியவை.
இவ்வாறு வரும் இடையூறுகளை களைந்து சிவ வழிபாடு முழுமை பெற இரண்டு சிவ வடிவங்களின் அருள் மிகவும் தேவை.
முதலில் வரும் சிவ வடிவம் அமைதியே உருவான தென்முகக்கடவுள் (தட்சணாமூர்த்தி).
இறுதியாக வரும் சிவ வடிவம் பைரவர்.
பைரவர் என்றால்
எந்த பைரவர் வேண்டுமானாலும் இருக்கலாம்.
இந்த இரண்டு சிவ வடிவங்களின் துணையின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது.
இந்த இரண்டு சிவ வடிவங்கள் மொத்தம் உள்ள 64 சிவ வடிவங்களிலும், வழிபாட்டிற்குரிய 25 சிவ வடிவங்களிலும் மிக மிக முக்கியமானவை.
தட்சிணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய இரு சிவ வடிவங்களும் ஒவ்வொரு சிவாலயங்களிலும் தனித்தனி சந்நிதி கொண்டு அருள் வழங்கும் வடிவங்கள் ஆகும்.
தட்சிணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய சிவ வடிவங்களும் சென்னியில் பிறையை சூடியவர்கள்.
இவர்களது தலையில் மூன்றாம் பிறை சந்திரனை நாம் காணலாம்.
தட்சிணாமூர்த்தி சிவபெருமானின் யோகவடிவம்.
ஞானகுரு என்றழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி அமைதியே உருவானவர்.
சிவ வடிவங்களில் மிகவும் சிறப்பானவர்.
தென் திசையை நோக்குபவர்.
இவரை வழிபடுவது மிகவும் எளிது.
இவரை வழிபட கடினமான வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது.
இவரை தொடர்ந்து வழிபட ஞானமும், செல்வமும், வெற்றியும் உண்டாகும். நமது கர்மவினைகள் படிப்படியாக நீங்கும்.
மந்திர செபம் செய்பவர்களுக்கு உகந்த கடவுள் இவரே.
இவரை வழிபட மனம் அமைதி பெறும்.
இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும்.
மந்திர செபம் செய்பவர்களின் மந்திர செபங்களுக்கு சக்தியை தருபவரும் இவரே.
மனநிம்மதியை தருபவரும் இவரே.
“ஓம் நமோ பகவதே தக்ஷ்ணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா”
மேற்கண்ட மந்திரம் தட்சிணாமூர்த்தியின் சிறப்பான மந்திரம் ஆகும்.
இந்த மந்திரம் ஜெபிக்க பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.
அசைவம் ஒன்று மட்டும் சாப்பிடக்கூடாது.
மேற்கண்ட மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் 21 முறை சிவத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சந்நிதியில் செபிக்க வேண்டும்.
பின்பு வீடு வந்து இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் 108 முறை செபிக்க வேண்டும்.
பின்பு தினமும் 108 முறை அல்லது 54 முறை அல்லது 27 முறை செபிக்க வேண்டும்.
இந்த மந்திரம் சகல தோஷங்களையும், சகல பாவங்களையும் நீக்க வல்லது.
தட்சிணாமூர்த்தியின் முன்பு எவ்வித தோஷமும், பாவமும் நில்லாது ஓடும். இவ்வாறு தொடர்ந்து செபித்து வர நமது கர்மவினைகள் முற்றிலுமாக நீங்கி 16 பேறுகளையும் பெறுவது திண்ணம்.
தட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவை கலந்த விளக்கேற்றி வழிபட வேண்டும்.
11 அல்லது 21 விளக்குகள் ஏற்றலாம். தெட்சிணாமூர்த்தியை வலம் வரும்போது 3, 9, 11 ஆகிய முறைகளில் சுற்றிவர வேண்டும்.
தட்சிணாமூர்த்திக்கு பிடித்த முல்லை அல்லது மல்லிகை மாலை அணிவித்து, கொண்டைக்கடலை, வெற்றிலை, பாக்கு, பழத்துடன் வழிபட வேண்டும். 🚩🕉🪷🙏🏼 #🙏🌾ஸ்ரீ குருபகவான் தட்சிணாமூர்த்தி🌾🙏 #தக்ஷிணாமூர்த்தி குரு பகவான் #🙏குரு பகவான்🙏 #🙏🏼ஓம் நமசிவாய #ஓம் நமசிவாய



