ShareChat
click to see wallet page
search
https://youtube.com/watch?v=AInA-uyY-j8&si=gDoepO_u5SNsQTiG 🕉️✡️ சித்ரா பௌர்ணமி சித்ரகுப்தன் பூஜை 2026 பற்றிய விளக்கம். ✡️🕉️ பராபவ தமிழ் வருஷம் சித்திரை மாதம் 18/01/5127ம் நாள் 01/05/2026 வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி சித்ரகுப்தன் பூஜை வேத தர்ம ஸாஸ்திரத்தில் க்ருதயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் ஆகிய யுகங்களில் மனிதப் பிறவிகளாக பிறந்த எந்த வர்ணக் காரர்கள் சித்ரகுப்தனாக இருப்பார்கள் என்று சொல்லப் பட்டுள்ள உண்மையான விஷயத்தை தான் பதிவிட இருக்கின்றோம். இந்த வீடியோ பதிவானது சித்ரா பௌர்ணமி சித்ரகுப்தனாக கலியுகத்தில் ப்ராஹ்மண வர்ணக் காரர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றிய முழு விளக்கம். ஆகவே அடியேனுடைய அனைத்து அன்பு இதயங்களும் மெய்யன்பர்களும் இந்த வீடியோ பதிவினை ஆரம்பம் முதல் கடைசி வரை முழுவதுமாக பார்த்து இந்நன்னாளில் அதன் ப்ரகாரம் கடைபிடித்து கொண்டு வேதம் படித்த வேத ஸாஸ்த்திரம் தெரிந்த ப்ராஹ்மணரை ஸ்ரீ சித்ரகுப்தராக வரித்து நினைத்து கொண்டு அவர்களுடைய பரிபூரண க்ருபா கடாக்ஷமானதும் பரிபூரண ஆசியும் தாங்களுக்கும் தங்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் மிக மிக மிக க்ஷேமமாகவும் ஸௌக்யமாகவும் ஸகல ஐஸ்வர்யத்துடனும் ஸத்ஸந்தான பாக்யத்துடனும் இருக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். முதலாவதாக வஸிஷ்ட மஹரிஷி ப்ராஹ்மணர் அனைத்து வர்ணக் காரர்களுக்கும் பாரபட்சம் பார்க்காமல் வைதீக கர்மாக்களை செய்து அனைவருக்கும் வேத தர்ம ஸாஸ்திரத்தை எடுத்துரைத்தவர். ஆனால் கலியுகத்தில் வேதம் படித்த ப்ராஹ்மணர் வைதீக கர்மாக்களை ப்ராஹ்மண வர்ணக் காரர்களுக்கு மட்டும் தான் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு நாம் செய்ய கூடாது என்று சுயநலவாதியாக வைதீகம் செய்ய கூடியவர்களை மாற்றி விட்டார்கள். ஆகவே இந்த ப்ரபஞ்ஜம் பூலோகம் முழுவதும் வேதம் படித்து நித்யமும் வைதீக கர்மாக்களை ப்ராஹ்மண வர்ணக் காரர்கள், க்ஷத்ரிய வர்ணக் காரர்கள், வைஸ்ய வர்ணக் காரர்கள், சூத்திர வர்ணக்காரர்கள் அனைவருக்கும் நல்ல முறையில் செய்து கொடுத்து வேத தர்ம ஸாஸ்த்திரத்தை அனைவருக்கும் எடுத்துரைத்து அனைவரையும் நல்வழிப் படுத்த வேண்டும். அதே போல வேதம் படித்த வேத தர்ம ஸாஸ்திரம் தெரிந்த ப்ராஹ்மணர்களுக்கு மட்டும் தான் தானங்களை கொடுக்க வேண்டும். மற்ற ப்ராஹ்மண வர்ணக் காரர்களுக்கு தானங்களை கொடுக்க கூடாது. வேதம் படித்தவர்களை தவிர மற்ற ப்ராஹ்மண வர்ணக் காரர்களுக்கு கொடுத்தீர்களே ஆனால் அதற்கு பலனானது கிடையாது. ஆனால் கலியுகத்தில் வேதம் படித்த ப்ராஹ்மணர்கள் சுயநலவாதியாக இருந்துக் கொண்டு தானங்களை தாங்கள் வாங்கி கொள்ளாமல் வேதமே படிக்காத ப்ராஹ்மணர்களை‌ அழைத்து கொடுப்பார்கள் இவை அனைத்தும் அவர்கள் படித்த வேதத்திற்கே துரோகம் செய்ய கூடிய செயலாகும்.‌ வேதம் படித்த வேத தர்ம ஸாஸ்திரம் தெரிந்த ப்ராஹ்மணர்களுக்கு நாம் அனைவரும் தானங்கள் கொடுப்பதால் நமது முற்பிறவியில் செய்த பாவங்கள் இப்பிறவியில் செய்த பாவங்கள் அனைத்தையும் அந்த ப்ராஹ்மணர் மூலமாக படிப்படியாக குறையும் என்று வேத தர்ம ஸாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ளது. மீண்டும் சொல்கிறேன் வேதம் படித்த வேத தர்ம ஸாஸ்திரம் தெரிந்த ப்ராஹ்மணருக்கு தானங்களை கொடுத்து தாங்கள் அனைவரும் க்ஷேமமாக இருக்க வேண்டுமாய் தாங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வாழ்க வளமுடன் நலமுடன் இனிய ஆசீர்வாதங்கள். 🕉️✡️ லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து. ✡️🕉️ #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி