N.Ramachandran
503 views • 1 months ago
https://youtube.com/watch?v=39ro6d_lESg&si=xkm-OPLvg_VdestS 🕉️✡️ ஆனித் திருமஞ்ஜனம் 2026 பற்றிய முழு விளக்கம். ✡️🕉️
பராபவ கலியுக தமிழ் வருஷம் ஆனி மாதம் 07/03/5127ம் நாள் 21/06/2026 ஞாயிற்றுக்கிழமை இரவு வேளையில் அனைத்து சிவாலயங்களிலும் பின்னிரவு ஸ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு ஆனித் திருமஞ்ஜனம் விசேஷ அபிஷேகம் நடைபெறும்.
பராபவ கலியுக தமிழ் வருஷம் ஆனி மாதம் 08/03/5127ம் நாள் 22/06/2026 திங்கள் கிழமை அன்று அதிகாலை ஸ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜப் பெருமான் பக்தர்களுக்கு ஆனித் திருமஞ்ஜனம் தரிசனம் தருகிறார்.
இன்றைய வீடியோ பதிவானது ஆனித் திருமஞ்ஜனம் நன்நாளில் நாம் அனைவரும் எதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பற்றிய முழு விளக்கம்.
ஆகவே அடியேனுடைய அனைத்து அன்பு இதயங்களும் மெய்யன்பர்களும் இந்த வீடியோ பதிவினை ஆரம்பம் முதல் கடைசி வரை முழுவதுமாக பார்த்து ஸாக்ஷாத் ஸ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜப் பெருமானின் பரிபூரண க்ருபா கடாக்ஷத்தையும் பரிபூரண ஆசியையும் பெற்று தாங்களும் தங்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் மிக மிக மிக க்ஷேமமாகவும் ஸௌக்யமாகவும் ஸகல ஐஸ்வர்யத்துடனும் ஸத்ஸந்தான பாக்யத்துடனும் இருக்க வேண்டுமாய் தாங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
முக்கியமாக மிகவும் நாம் அனைவருக்கும் அவசியமானதுமான விஷயம் என்னவென்றால் தனுர் மாதம் மார்கழி மாதம் ஆர்த்ரா தரிசனத்தன்று ஸ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜப் பெருமானை தரிசனம் செய்வதை விட ஆனித் திருமஞ்ஜனம் நன்நாளில் ஸ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜப் பெருமானை தரிசனம் செய்தால் நமக்கும் நமது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பல கோடி நண்மைகள் நடைபெறும் என்று இந்து சனாதன வேத தர்ம ஸாஸ்த்திரத்தில் சொல்லப் பட்டுள்ளது. அவ்வளவு விசேஷம் அடங்கிய நன்நாள் தான் ஆனித் திருமஞ்ஜனம்.
ஆனித் திருமஞ்ஜனம் நன்நாளில் நாம் அனைவரும் நமது அருகாமையில் உள்ள சிவபெருமான் கோயிலுக்கு இரவு நேரத்தில் எந்த சிவாலயத்தில் ஸ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு விசேஷ அபிஷேகம் ஆனது நடைபெருகிறதோ, வசதி இருப்பவர்கள் சிதம்பரம் ஸ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜப் பெருமான் கோயிலுக்கு சென்று அங்கு நடைபெறும் அபிஷேகம் ஆராதனையில் கலந்து கொண்டு அவரவர்களுடைய தகுதிக்கு ஏற்ப அபிஷேகப் பொருட்களை வாங்கி கொடுத்து ஸ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு வில்வ மாலையும், தாமரைப்பூ மாலையையும் சாற்றி, ஸ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு குடாண்னம் சர்க்கரை பொங்கல், சித்ராண்னம் புளியோதரை நெய்வேத்தியம் செய்து அங்கு கூடியிருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக கொடுத்து ஸ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜப் பெருமானின் திருப்பாதங்களில் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் இந்த ப்ரபஞ்ஜம் பூலோகம் முழுவதும் உயிர் பிராணிகளாகவும் மனிதப் பிறவிகளாக பிறந்த நாம் அனைவருக்கும் நமது 07 ஜென்ம பாவங்களும் இந்த பிறவியில் செய்த பாவங்களும் நீங்கி நமக்கும் நமது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஸ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜப் பெருமானின் பரிபூரண க்ருபா கடாக்ஷமானதும் பரிபூரண ஆசியும் கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
வாழ்க வளமுடன் நலமுடன் இனிய ஆசீர்வாதங்கள்
🕉️✡️ லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து. ✡️🕉️ #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி
11 likes
9 shares

