மேக.பேச்சிராஜன் நாடார்
தமிழ்நாடு நாடார் சங்கம்!
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது அவதார திருவிழா முன்னிட்டு சென்னை திநகரில் உள்ள ஐயா அவர்களின் இல்லத்தில்
ஜூலை 15ஆம் தேதி வருகின்ற புதன்கிழமை காலை 9 மணி முதல் தமிழ்நாடு நாடார் சங்கம் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் வர கேட்டுக் கொள்கிறோம்
தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பாக தலைவர் முத்து ரமேஷ்குமார் நாடார் அவர்கள் தலைமையில் காலை 11 மணிக்கு கல்விக்கண் திறந்த ஐயா காமராஜர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்த இருக்கிறோம்
தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பாக கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது!
124 சேலைகள் பெண்களுக்கு வழங்க இருக்கிறோம்
124 ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசி வழங்க இருக்கிறோம்
இளைஞரணி சார்பாக 124 கிலோ பிரமாண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கியிருக்கிறோம்
பரப்புரை அணி சார்பாக 1124 மரக்கன்று வழங்க உள்ளனர்
தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக பாலாபிஷேகம் செய்து 1008 எலுமிச்சம்பழம் மாலை ஐயா அவர்களின் திருஉருவச் சிலைக்கு அனுவித்து மரியாதை செலுத்த இருக்கிறோம்
அதன் பின்னர் தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் மோர் வழங்க இருக்கிறோம்
தென் சென்னை வடக்கு மாவட்டம் சார்பாக மதியம் 12 மணிக்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க இருக்கிறோம்
ஆகையால் நமது சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் ஐயா அவர்களின் அவதாரத் திருநாள் அன்று தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்
நிகழ்ச்சியில் அனைவரும் தவறாமல் நமது சங்கத் துண்டு அணிந்து வர கேட்டுக்கொள்கிறோம்
ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம் !
என்றும் அன்புடன் உங்கள்!
ஆனைகுடி செ வீரகுமார் நாடார்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு நாடார் சங்கம்
9884105559 - 9444000006 #💪இலட்சிய கனவு 💭 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #👑தேர்தல்-அதிகாரபூர்வ செய்திகள்✅ #🚹உளவியல் சிந்தனை