மகளிர் அதிகாரம் மற்றும் உரிமைக்கு எதிராக துரோகம் செய்த மு.க.ஸ்டாலின்: வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் தான் இடம் பெறுவார்!
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை சமூக அநீதியாளர்களையெல்லாம் ஒன்று திரட்டி வீழ்த்தியது மட்டுமின்றி, மகளிருக்கு அதிகாரம் வழங்கப்படுவது தடுக்கப்பட்டதை பட்டாசு வெடித்தும் மு.க.ஸ்டாலின் கொண்டாடியிருக்கிறார். காலம் கொடூரமானவர்களை அடையாளம் காட்டும் என்பதற்கு வாழும் உதாரணமாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். மகளிருக்கு எதிராக துரோகங்களை இழைத்ததுடன், அதை வெற்றியாகவும் கொண்டாடுவது கண்டிக்கத்தக்கது.
உள்ளாட்சி அமைப்புகளில் தொடங்கி சட்டப்ப்பேரவை மற்றும் நாடாளுமன்றம் வரை மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சிந்தனை 1987&ஆம் ஆண்டில் எழுந்தது. முதற்கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவதற்காக 1993&ஆம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. அதன்பின் இன்று வரையிலான 33 ஆண்டுகளில் மகளிர் இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்க பல்வேறு தருணங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை வெற்றி பெறவே இல்லை. எண்ணற்ற தருணங்களில் இந்த முயற்சியைக் கூட்டணி வைத்து முறியடித்தது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான்.
சமூகநீதிக்கு எதிரான டி.என்.ஏ கொண்டவர்களின் குணமும், நடத்தையும் எந்தக் காலத்திலும் மாறாது என்பதற்கு எடுத்தக்காட்டாகத் தான் கடந்த காலங்களில் மகளிர் இட ஒதுக்கீட்டை முறியடித்த திமுகவும், காங்கிரஸ் கட்சியும் இப்போதும் தங்களின் சமூக அநீதி சாகசத்தை மீண்டும் ஒருமுறை அரங்கேற்றியுள்ளன. தமிழ்நாட்டில் பெண்களின் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்ற 5 பெண் உறுப்பினர்கள் உள்ளிட்ட 40 மக்களவை உறுப்பினர்களும் இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்து சமூகநீதி படுகொலை செய்திருப்பதை ஏற்க முடியாது.
மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிராக திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் வாக்களிப்பதற்கு எந்தவொரு நியாயமான காரணங்களும் இல்லை. மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் கூட்டப்படும் என்று அறிவிப்பு வெளியான நாள் முதலாகவே, இதற்கு எதிராக மு.க.ஸ்டாலின் மூகாரி இராகம் தான் பாடி வந்தார். முதலில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு விடும் என்று குற்றஞ்சாட்டினார்.
ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்றும், அனைத்து மாநிலங்களையும் போலவே தமிழ்நாட்டிலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 50% உயர்த்தப்பட்டு 59 இடங்களாக அதிகரிக்கும் என்று நானும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் உறுதியளித்த நிலையில், அதையெல்லாம் ஏற்க முடியாது; இதற்கான உத்தரவாதத்தை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வழங்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். அதையும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது; மக்களவையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் இப்போதுள்ள 7.18%ஐ விட சற்று அதிகமாக 7.23% ஆகவும், தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆகவும் உயரும் என்றும் பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் நாடாளுமன்றத்தில் உறுதியளித்தனர்.
அதன்பிறகும் எதிர்க்கட்சிளை ஒன்று திரட்டி, மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை மு.க.ஸ்டாலின் வீழ்த்தியிருக்கிறார் என்றால், அதற்குக் காரணம் அவர் மனதில் ஊறியிருக்கும் பெண்ணடிமை புத்தியும், பெண்கள் ஒரு காலத்திலும் சட்டமன்ற உறுப்பினராகோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ உயர்ந்து விடக் கூடாது; அவர்கள் எப்போதும் அடுப்பூதும் பெண்களாகவே தொடர வேண்டும் என்ற வன்மமும் தான். பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற தனது சமூகநீதி வெறுப்பை இப்போது ஸ்டாலின் உமிழ்ந்திருக்கிறார்.
மகளிர் இட ஒதுக்கீட்டு அரசியல் சட்டத் திருத்த முன்வரைவு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டிருந்தால், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை தேசிய அளவில் 816 ஆகவும், தமிழகத்தில் 59 ஆகவும் அதிகரித்திருந்திருக்கும். தேசிய அளவில் 273 இடங்களும், தமிழக அளவில் 20 இடங்களும் கூடுதலாக உருவாக்கப்பட்டு மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். இன்னும் 3 ஆண்டுகளில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தமிழகத்திலிருந்து குறைந்தது 20 பெண்கள் மக்களவையில் வீற்றிருந்திருப்பார்கள். ஆனால், அதைக் கெடுத்தது வன்மமும், வஞ்சகமும் நிறைந்த மு.க.ஸ்டாலினும், அவரது சகாக்களும் தான்.
மகளிர் இட ஒதுக்கீட்டு சட்ட மசோதாவை தோற்கடிக்கச் செய்தது மட்டுமின்றி, அதை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடியிருப்பது அவரது சாடிச மனப்பான்மையைத் தான் வெளிப்படுத்துகிறது. இரண்டாம் உலகப் போரின் போது 1941 முதல் 1945 வரையிலான காலகட்டத்தில் ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப் பட்ட ஐரோப்பிய பகுதிகளில் வாழ்ந்த 90 லட்சம் யூதர்களில், மூன்றில் இரு பங்கினரான 60 லட்சம் யூதர்களை ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் இனஅழிப்பு செய்தார். கொத்துக் கொத்தாக யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட போதெல்லாம் அதைக் கண்டு ரசித்ததாகவும், மகிழ்ந்ததாகவும் வரலாறு கூறுகிறது. கொடுங்கோலர் ஹிட்லரின் இந்த சாடிசமும், மு.க.ஸ்டாலினின் நவீனகால சாடிசமும் ஒன்று தான்; இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை வீழ்த்தி விட்ட மகிழ்ச்சியில் மு.க.ஸ்டாலினும் அவரது கூட்டாளிகளும் எக்காளமிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், 33 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பு கைநழுவி விட்டதை எண்ணி தாய்மார்கள் வேதனையில் உழன்று கொண்டிருக்கிறார்கள். இந்த மசோதா மட்டும் நிறைவேற்றப்பட்டிருந்தால் கைக்கெட்டும் காலத்தில், அதாவது இன்னும் 3 ஆண்டுகளில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை அலங்கரித்திருப்பார்கள். இதன் மூலம் உலகில் அதிக பெண் உறுப்பினர்களைக் கொண்ட அவையாக இந்திய நாடாளுமன்ற மக்களவை உருவெடுத்திருக்கும். ஆனால், வன்மக் கிடங்கு மு.க.ஸ்டாலினும் அவரது சகாக்களும் இந்த வரலாற்று வாய்ப்பைக் கெடுத்து விட்டார்கள். அந்த வாய்ப்பு இந்தியப் பெண்களுக்கு இனி எப்போது மீண்டும் கிடைக்கும் என்பது தெரியவில்லை.
சட்டமியற்றும் அவைகளில் பாலினச் சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம் ஆகும். ஆனால், 23 நாடுகளின் மக்கள் அவைகளில் மட்டும் தான் இதுவரை பெண்களின் பிரதிநிதித்துவம் 40 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. இந்திய மக்களவையில் மகளிர் பிரதிநிதித்துவம் இப்போது வெறும் 13.6% (74 பேர்) ஆகவே உள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்குக் கிடைத்த அற்புதமான வாய்ப்பைக் கெடுத்த மு.க.ஸ்டாலின் துரோகக் கருப்புப் பக்கங்களில் தான் இடம் பெறுவார். அவரை மகளிர் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது. இதற்கான தண்டனையை திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் அளிப்பார்கள். ##PMK2.0
![#PMK2.0 - மகளிர் அதிகாரம் மற்றும் உரிமைக்கு எதிராக செய்த துரோகம் முகஸ்டாலின்: வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் இடம் பெறுவார்! தான் 33% 09989` 18.04.26 மருத்துவர்அன்புமணி ராமதாஸ் எம்பி தலைவர் பாட்டாளி மக்கள் கட்சி dranbumaniramadoss AnbumaniRamadoss ddraramadoss] மகளிர் அதிகாரம் மற்றும் உரிமைக்கு எதிராக செய்த துரோகம் முகஸ்டாலின்: வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் இடம் பெறுவார்! தான் 33% 09989` 18.04.26 மருத்துவர்அன்புமணி ராமதாஸ் எம்பி தலைவர் பாட்டாளி மக்கள் கட்சி dranbumaniramadoss AnbumaniRamadoss ddraramadoss] - ShareChat #PMK2.0 - மகளிர் அதிகாரம் மற்றும் உரிமைக்கு எதிராக செய்த துரோகம் முகஸ்டாலின்: வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் இடம் பெறுவார்! தான் 33% 09989` 18.04.26 மருத்துவர்அன்புமணி ராமதாஸ் எம்பி தலைவர் பாட்டாளி மக்கள் கட்சி dranbumaniramadoss AnbumaniRamadoss ddraramadoss] மகளிர் அதிகாரம் மற்றும் உரிமைக்கு எதிராக செய்த துரோகம் முகஸ்டாலின்: வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் இடம் பெறுவார்! தான் 33% 09989` 18.04.26 மருத்துவர்அன்புமணி ராமதாஸ் எம்பி தலைவர் பாட்டாளி மக்கள் கட்சி dranbumaniramadoss AnbumaniRamadoss ddraramadoss] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_337278_23e8cc61_1776551318355_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=355_sc.jpg)

