#கவிதைஉலகம்
வார்த்தைகளில் தேன் தடவி பேசியவர்கள்
இறுதியில் கசப்பை மட்டுமல்ல
மன்னிக்கவே முடியாத துரோகத்தையும் பரிசாக கொடுத்தார்கள்
காயம் ஆறலாம்
ஆனால் துரோகத்தின் வலி மறைவதில்லை
என் கண்ணீருக்கு நான் பதில் கேட்கவில்லை
கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை போதும்
நீங்கள் செய்த தவறுகளுக்கும்
நம்பிக்கையை உடைத்த துரோகத்திற்கும்
நான் நீதிபதி அல்ல
காலம் அமைதியாக காத்திருக்கிறது
கடவுள் சரியான நேரத்தில்
சரியான தீர்ப்பை வழங்குவார்

