https://youtube.com/watch?v=iR49u6pa5bQ&si=mKjY_wOdhX0SQqDX 🕉️✡️ சித்ரா பௌர்ணமி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது பற்றிய முழு விளக்கம். ✡️🕉️
பராபவ கலியுக தமிழ் வருஷம் சித்திரை மாதம் 18/01/5127ம் நாள் 01/05/2026 வெள்ளிக்கிழமை அன்று தான் அதிகாலை வேளையில் ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்.
ஸாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணப் பெருமாளே தான் இந்த கள்ளழகர் க்ருதயுகத்திலே மாண்டூக மாமுனிவர் ஒருவர் இருந்தார் இவர் தனது சிறு வயதிலேயே அதாவது 14 வயது முடிவதற்குள் சதுர்வேதத்தையும் அதாவது ருக் யஜூர் ஸாமம் அதர்வணம் வேதத்தையும் வேத தர்ம ஸாஸ்திரத்தையும் ப்ராஹ்மண க்ஷத்திரிய வைஸ்ய சூத்திர வர்ணக்காரர்களின் அனைத்து தர்ம ஸாஸ்த்திரத்தையும் கரைத்துக் குடித்து வேதம் கற்றுக் கொண்டதிலேயும் சரி தர்ம ஸாஸ்த்திரத்தை கரைத்து குடித்ததிலும் சரி எனக்கு நிகரானவர்கள் இந்த பிரபஞ்சத்தில் எவருமே இல்லை என்ற அஹங்காரத்தில் தலை கணத்தில் ஈரேழு பதினான்கு லோகத்தையும் சுற்றி வந்தார் அந்த முனிவருக்கு 20 வயது இருக்கும் போது அவர் த்யானத்தில் இருக்கும் போது அவர் இந்த பூலோகத்திற்கே சாபம் கொடுத்தார் அதனால் நான்கு வேதங்களுக்கும் அதிபதியாக இருக்கக் கூடிய ஸ்ரீ பரமேஸ்வரர் மாண்டூக முனிவருக்கு இந்த அறியா பருவத்திலேயே உன்னுடைய அஹங்காரத்தால் வயோதிக நிலையை அடைவாய் என்று ஸ்ரீ பரமேஸ்வரர் மாண்டூக முனிவருக்கு சாபம் கொடுத்தார் உடனே மாண்டூக மாமுனிவர் வயோதிகரானார். உடனேயே மாண்டூக மாமுனிவர் மும்மூர்த்திகளிடம் இதற்கு சாப விமோசனத்தை வேண்டி தவம் இருந்தார் அப்பொழுது ஒருநாள் ஸ்ரீ நாராயணப் பெருமாள் மாண்டூக மாமுனிவர் முன்னால் வந்து மாண்டூக முனிவரே நான் பூலோகத்தில் கள்ளழகராக அவதாரம் எடுத்து வைகை ஆற்றில் சித்ரா பௌர்ணமி தினத்தன்று நீராடுவேன் அப்பொழுது தாங்கள் என்னுடன் நீராடினால் அந்த க்ஷணமை தங்களுக்கு இந்த சாபத்தில் இருந்து விலகி உங்களுக்கு சாப விமோசனமானது கிடைக்கும் என்று மாண்டூக முனிவருக்கு ஸ்ரீ நாராயணப் பெருமாள் சொல்லி விட்டு மறைந்தார். உடனை மாண்டூக மாமுனிவர் பூலோகம் வந்து வைகை ஆற்றில் ஸ்ரீ கள்ளழகர் இறங்கி ஸ்நானம் செய்யும் பொழுது மாண்டூக மாமுனிவரும் வைகை ஆற்றில் இறங்கி ஸ்நானம் செய்து ஸ்ரீ கள்ளழகர் மாண்டூக மாமுனிவரின் சாபத்தை போக்கினார். உடனே மாண்டூக மாமுனிவர் வயோதிக நிலையை விட்டு பருவ வயதை அடைந்து இளைஞ்சராக மாறினார்.
ஆகவே இந்நன்னாளில் நாம் அனைவரும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஸ்ரீ கள்ளழகருடைய பரிபூரண க்ருபா கடாக்ஷத்தையும் பரிபூரண ஆசியையும் பெற்று தாங்களும் தங்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் மிக மிக மிக க்ஷேமமாகவும் ஸௌக்யமாகவும் ஸகல ஐஸ்வர்யத்துடனும் ஸத் ஸந்தான பாக்யத்துடனும் இருக்க வேண்டுமாய் தாங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்க வளமுடன் நலமுடன் இனிய ஆசீர்வாதங்கள்.
🕉️✡️ லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து. ✡️🕉️ #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி

