11 வருட மெமரி..
மகரத்திற்கு செவ்வாய் தரும் யோகம்.
#adityaguruji
#மகரம்
#மகரம்லக்னம்
#லக்னம்
#செவ்வாய்
#செவ்வாய்பகவான்
#பகவான்
#யோகம்
✨ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888✨
உங்கள் ஜாதகம் யோகஜாதகமா? 52
மகர லக்னத்திற்கு செவ்வாய் பகவான் அளிக்கும் ருசகயோக பலன்களை இப்போது பார்ப்போம்......
மகரம் :
மகரம் சரலக்னம் என்பதால் செவ்வாய் இந்த லக்னத்திற்கு பாதகாதிபதியாகி, தன் பாதக ஸ்தானமான பதினொன்றுக்கு மூன்றில் மறைந்து லக்னத்தில் உச்சம் பெற்றும், இன்னொரு நிலையாக நான்கிற்குடைய சுகாதிபதியாகி நான்காமிடத்தில் ஆட்சி பெற்றும் இரு நிலைகளில் ருசகயோகம் தருவார்.
லக்னத்தில் உச்சம் பெற்று தசை நடத்தும் நிலையில் அவர் பாதகம் செய்யும் உரிமையை பெறுவார் என்பதாலும் பாதகாதிபதி வலிமை அடைந்து விட்டார் என்பதாலும் லக்ன அஷ்டமாதிபதியான சூரியன் சாரத்திலோ, தனது சுயச் சாரத்திலோ இருந்து விட்டால் தனது தசையில் ருத்ரதாண்டவமே ஆடுவார். தசையின் ஒரு பகுதி மிகவும் கடுமையாக இருக்கும்.
இந்த லக்னத்திற்கு சூரிய, சந்திர, செவ்வாய் மூவருமே கடுமையான பாவிகள் என்பதாலும், இந்த மூவரின் சாரத்தில் தான் செவ்வாய் லக்னத்தில் இருக்க முடியும் என்பதாலும், சாரம் தரும் மூவரும் ஏதேனும் ஒரு சூட்சும வழியில் சுபத்தன்மை அடைந்தால் ஒழிய செவ்வாய் தசை நன்மை அளிக்காது.
லக்னத்தில் உச்சம் பெற்று நான்கு, ஏழு, எட்டாமிடங்களைப் பார்க்கும் நிலையில் அவருடைய வீட்டை அவரே பார்க்கிறார் எனும் நிலையில் நான்காமிடம் மட்டும் வலுப்பெறும். ஜாதகருக்கு தனது பாதகமான வழிகளில் வீடு, வாகனம் போன்றவற்றை செவ்வாய் அளிப்பார்.
ஏழு, எட்டாம் பாவங்களைப் பார்ப்பது நிச்சயம் கெடுதல்தான். மணவாழ்வில் திருப்தியின்மை, சரியில்லாத புரிந்து கொள்ளாத மனைவி, தாம்பத்திய உறவில் அதிக வேட்கை, முறையில்லாத வழக்கமற்ற முறைகளிலான உறவில் நாட்டம், ஆகியவற்றை செவ்வாய் அளிப்பார்.
எட்டாமிடத்தை அவர் பார்ப்பதும் சரியான நிலை அல்ல. அவரின் தசையில் விபத்து, அடிதடி, கோர்ட், கேஸ் போன்ற வில்லங்கங்களில் மாட்டிவிடுவார். போலீஸ் ஸ்டேஷனில் இருக்க வைப்பார்.
மற்றபடி லக்னத்தில் செவ்வாய் இருந்தால் ஜாதகருக்கு என்ன குணங்கள் இருக்கும் என்று மற்ற லக்னங்களுக்கு நான் சொன்னதை விட செவ்வாய் இங்கு உச்சம் பெறுவதால் ஒரு படி அதிகமான குணங்களுடன் ஜாதகர் இருப்பார்.
மகர லக்னத்திற்கு இன்னொரு நிலையான நான்காமிடத்தில் ஆட்சி பெறுவது நல்ல நிலைதான்.
ஒரு இயற்கைப் பாபக்கிரகம் கேந்திரத்திற்கு அதிபதியாகி கேந்திரத்திலேயே இருப்பதும், ஒரு பாதகாதிபதி தன் பாதக ஸ்தானத்திற்கு ஆறில் மறைந்து பாதகத்தைத் தரும் வலிமை இழப்பதும் நல்ல நிலையே.
இங்கிருக்கும் செவ்வாயால் ஜாதகரை காவல்துறை ராணுவம் போன்றவற்றில் உயர்பதவியில் அமர வைக்க முடியும். நான்காமிடத்தின் சுப காரகத்துவங்களான வீடு, வாகனம், அம்மாவின் ஆதரவு, கல்வி போன்றவைகளைத் தர முடியும். கண்டிப்பாக அஷ்டமாதிபதி சூரியனின் சாரமான கிருத்திகையில் இங்கே இருக்கக் கூடாது.
நாளை கும்பத்தை கவனிப்போம்..
🍂அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888,044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.🍂 #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #🔍ஜோதிட உலகம் 🌍 #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻


