ShareChat
click to see wallet page
search
🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹தேவாரம்🌹🙏* *☀️திருமுறை3️⃣☀️* *🌹திருக்கோகரணம்🌹* *🦚பாடல்:0848///1358🦚* `மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா` ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹முறைத்திறமு றப்பொருடெரிந்துமுனி வர்க்கருளி யாலநிழல்வாய் மறைத்திற மறத்தொகுதி கண்டுசம யங்களைவ குத்தவனிடம் துறைத்துறை மிகுத்தருவி தூமலர் சுமந்துவரை யுந்திமதகைக் குறைத்தறை யிடக்கரி புரிந்திடறு சாரன்மலி கோகரணமே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *கல்லால நிழலின் கீழ்ச் சனகாதி முனிவர்கட்கு அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களையும் சிவ பெருமான் முறையோடு உபதேசித்தார். வேதத்தின் பொருளாகிய சரியை முதலிய நாற்பாதப் பொருட்களையும் கண்டு அறுவகைச் சமயங்களை வகுத்தவர் சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் துறைகள்தோறும் அருவிநீர் தூய்மையான மலர்களைச் சுமந்து கொண்டு, மூங்கில்களைத் தள்ளி, மதகுகளைச் சிதைத்து, யானை பிளிற மோதும் சாரலையுடைய திருக்கோகரணம் என்னும் தலமாகும்.* `எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!!` *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌺திருஞானசம்பந்தர்🌺* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - ShareChat