Ananya karthi
437 views • 16 hours ago
அவன் தூங்கியது தெரிந்து அவனருகே வந்தவள், சிறிது நேரம் அவனையே பார்த்தாள்.
பின் பெருமூச்சுடன் கட்டிலின் ஒரு ஓரமாக சாய்ந்துப் படுத்துக் கொள்ள, உறக்கம் என்பது சற்றும் வரவில்லை.
எப்படி வரும்… தன்னுடையவன் அருகில் இருக்க… அவன் மார்புக்கூட்டில் புதைந்து ஆறுதல் கொள்ள வேண்டும் என்று எழுந்த உணர்வை அடக்கப் பெரும்பாடு பட்டாள் பெண்.
திரும்பி திருமாறனை நோக்கி படுத்தவாறு அவனைப் பார்க்க, அதற்காகவே காத்திருந்தவன் போன்று, அவள் தலையை தன் தோளுக்கு மாற்றி, நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் திருமாறன்.
முதலில் அதிர்ந்து பின் விலகப் போனவளை, விடாமல் இறுக்கிக் கொள்ள, அதுவரை அடக்கி வைத்த உணர்வுகள் யாவும், அழுகையாக மாற… அடக்கிக் கொண்டாலும் முடியாதுப் போக, அழுகை வெடித்தது.
சிறு விம்மலுடன் அவனின் சட்டையை இறுகப் பற்றிக் கொண்டாள்.
அவள் தலை ஒதுக்கி, முதுகை வருடிக் கொடுத்தவன் “ஒன்னுமில்லடா… தேவா! அழக்கூடாது… என்கிட்ட வந்துட்ட இல்ல.. நான் பார்த்துக்குறேன்மா… எல்லாம் சரியாகிடும்…” என்ற ஆறுதல் வார்த்தைகளில் இன்னும் அழுகை கூடியது.
“என் மேல கோபமா! நாலு அடி வலிக்குறது மாதிரி அடிச்சுடு தேவா… இப்படி அழாத ப்ளீஸ்…” என்றவாறு அவளை நிமிர்த்த, அவனுக்கு முகத்தை காட்டாமல் இன்னும் அவன் மார்புக்குள் ஒன்றி கொண்டாள். அவனும் அவள் தலையை வருடிக் கொடுக்க, அவளின் அழுகை தேய்ந்து, விசும்பலாக மாறி… பின் சற்று நேரத்தில் தூங்கி போயிருந்தாள் தர்ஷினி.
அதன் பின் அவளின் முகத்தை நிமிர்த்தி, நெற்றியில் முத்தமிட்டு கண்ணீரை துடைத்து விட்டான் திருமாறன். அவன் டிஷர்ட்டினை இழுத்து கைகளுக்குள் வைத்திருந்தாள் தர்ஷினி… எங்கே விட்டால் எழுந்து சென்று விடுவானோ என்பது போல…
"நினைத்தாலே நெஞ்சம் இனிக்குதே ..." நாவலை படிக்க;👇👇👇👇👇
*Ninaithalea nenjam inikuthea...*
by Ananya karthi
Read on Papr
https://papr.space/article/698823ae8c5dfb66b6c2407b?ref=social&src=whatsapp
# #💑கணவன் மனைவி காதல்💞 #நாவல்கள் #காதல் நாவல்கள் #💑என் காதல் கணவா💞
15 likes
10 shares

