B. CELLIN
#👏இயேசு #✝️கிறிஸ்தவ பாடல்கள்🎶 #✝️பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪வேளாங்கண்ணி சர்ச் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 இணைந்து செபிப்போம்*
*ஆண்டவர் இயேசுவே! “நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை”என, இன்றைய இறைவார்த்தையில், என்னை நம்பிக்கையில் நிலைத்து வாழ அழைக்கின்றீரே. இயேசுவே, நான் நம்பிக்கை வாழ்வை எனதாக்கவும், என்னில் ஏற்படும் நல்வழி நோக்கிய மாற்றங்களும், அனுபவங்களும், உமது அருட்கொடைகளே என உணர்ந்து, நம்பிக்கையை என்னில் ஆழப்படுத்தவும் அருள் தாரும். வாழும் மூவொரு இறைவா! உம்மில் நம்பிக்கை கொள்ளாமல், அழிந்து போகும் உலக செல்வங்களை தேடவும், சேர்க்கவும் ஆசை கொண்டு, உலகத்தின்பின் வழிதவறிய ஆடாக சென்ற என்னை, தேடி வந்து உம்மில் மகிழ வைத்தவரே! உமக்கு நன்றி கூறுகின்றேன். என் வாழ்நாள் எல்லாம் உம்மிலும், உம் வார்த்தையிலும் நம்பிக்கை வைத்து, நிலைத்து வாழ அருள் கூர்ந்தருளும்.*
*இயேசுவே ஆண்டவரே! “நீங்கள் இறைவனிடம் வேண்டும் போது நம்பிக்கையுடன் கேட்பதை எல்லாம் பெற்றுக்கொள்வீர்கள்” என்றவரே, நான் நம்பிக்கையுடனும், விசுவாசத்தைடனும் உம்மிடம் மன்றாடவும்; இறை நம்பிக்கையை என்னில் வளர்த்து கொள்ளவும் ஆற்றலைத்தாரும். “ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்”என, தூய பவுலடிகளார் வழங்கிய ஆசீர்வாதம் என் மீதும், என் குடும்பத்தின் மீதும் நிறைவாய் பொழிவீராக; இன்று நானும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும், நம்பிக்கையில் வாழ்வில் உயர வேண்டும் என்று, இயேசுவின் நாமத்தில் செபிக்கின்றேன்.ஆமென்!*
நன்றி - தமிழ் ஆன்மீக பணியகம்