
४३ ह व्ह्यू · ५०६ प्रतिक्रिया | 🐻கரடியை நாம் எதிர் கொண்டால்... வனவிலங்குகளில் மிகவும் கொடூரமான ஆபத்தான ஒரு விலங்கு என்றால் அது கரடி என்பது மிகையல்ல... கொடிய விலங்கு கரடியே... ஒருவேளை நாம் காடுகளில் பயணப்படும் போது நேருக்கு நேர் கரடி இருந்தால்... 🐻 நாம் ஓடினால் கரடி நம்மை விட வேகமாக ஓடும். 🐻 நாம் மரம் ஏறி தப்பிக்கலாம் என முயன்றால் கரடி நம்மை விட சுறுசுறுப்பாக மரம் ஏறும். 🐻 நாம் குளம், குட்டை போன்ற நீர்பகுதிகளில் குதித்து நீந்தி தப்பலாம் என்றால் கரடி நம்மை விட வேகமாக நீந்தும் எனினும், சில ஐடியாக்கள் உள்ளது ( இது வெற்றி பெறலாம் அல்லது தோல்வியில் முடியலாம்) * கரடி நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் தனிமையில் செல்வது ஆபத்து. * கூட்டமாக சத்தமிட்டபடி, கூச்சலிட்டப்படி சென்றால் கரடி நம்மை விட்டு சென்றுவிடும். * வனபகுதியில் தனிமையில் செல்ல நேரிடும் போது கரடி நம்மை பார்க்காமல், நாம் கரடியை கண்டால்... ஓசையின்றி அமைதியாக பின்னோக்கி நடக்கவேண்டும். தொலைவில் வந்த பிறகு ஓடி தப்பிக்க வேண்டும். * ஒருவேளை கரடியும் நாமும் நேருக்கு நேர் எதிர்கொண்டால், எநத ஆரவாரமுமின்றி சிலை போல அமைதியாக நிற்கவேண்டும். இதனால் கரடி நம்மை விட்டு விலகி செல்ல வாய்ப்புள்ளது. * ஒருவேளை கரடி தாக்க வருவதாக உணர்ந்தால் நாம் கையை மேலே தூக்கி பயங்கரமான சத்தமிடும் பட்சத்தில் கரடி பயந்து சென்றாலும் செல்லலாம் (இது உறுதி இல்லை) 🐻 எல்லாவற்றையும் விட கரடியை நம் அருகில் தாக்கும் வெறியோடு வந்தால்... நாம் செத்த பிணம் போல நடிக்க வேண்டும். அதுவும் கரடி முகத்தையும் கழுத்தையும் முதலில் தாக்கும் என்பதால்... கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு (கண்ணை நோண்டி எடுக்கும்) கையை கழுத்தில் கோர்த்து, முட்டியை முகத்திற்கு அருகே கொண்டு வந்து சுருண்டு செத்த பிணம் போல கிடக்க வேண்டும். இது ஓரளவுக்கு பலன் தரும், ஒருவேளை கரடி தாக்கினாலும், உயிர் பிழைக்க அதிக வாய்ப்பிருக்கும். கரடி புலியுடனே சண்டையிடும் கொடிய விலங்கு என்பதால், நாம் ஒரு போதும் கரடியுடன் மல்யுத்தம் செய்து பிழைக்க முடியாது... ஆனாலும் இந்தக் கரடியானது காட்டிற்கு மிக அவசியம் மட்டுமல்ல கரடிகள் பாதுகாக்கப்பட வேண்டும் ஒரு விலங்கு ஆகும். கரடிகள் காடுகளின் ஆரோக்கியத்திற்கும், சமநிலைக்கும் மிக முக்கியப் பங்காற்றுகின்றன ("வனப்பாதுகாவலர்கள்" என அழைக்கப்படுகின்றன). அவை பழங்களை உண்டு, விதைகள் மூலம் பரப்பி புதிய காடுகள் வளர உதவுகின்றன. மேலும், மண்ணைத் தோண்டி நுண்ணூட்டச் சத்துக்களை அதிகரிக்கின்றன, சில நேரம் இறந்த விலங்குகளை உண்பதன் மூலம் காட்டைச் சுத்தமாக வைத்து சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுகின்றன * உலகில் 8 வகையான கரடிகள் உள்ளன. * இந்தியாவில் 4 வகையான கரடிகள் உள்ளன. * கரடிகளுக்கு கரையான் புற்றுகள் எறும்பு புற்றுகள் தோண்டி எடுக்கும் வகையில் இயற்கையாகவே நகங்கள் வலிமையாக இருக்கும். * கரடிகளின் கால் பாதங்கள், மூக்கு துவாரங்கள், தாடைகள் வித்தியாசமான உருவ அமைப்பு கொண்டவை. * இரவு நேரங்களில் இரை தேடினாலும், சூரிய ஒளி முன்பாக அல்லது பின்பாக காலை மாலை நேரங்களிலும் இரை தேடும். * இனப்பெருக்க காலங்களில் குறிப்பாக டிசம்பர் காலத்தில் குட்டியை ஈன்றெடுக்கும், * தனது குட்டியை இரண்டு வருடங்கள் பாதுகாக்கும். ஊட்டி, குன்னூர் கொலகொம்பை, கோட்டகல், கோத்தகிரி எஸ்டேட் பகுதிகள், மசினகுடி, முதுமலை காடுகள், வால்பாறை ஈட்டியாறு, உபாசி கல்லாறு காடுகள், ராயான் எஸ்டேட், மூணாரின் சில பகுதிகள் என நான் பார்த்த பகுதிகளில் இவை அதிகம் தென்படுகிறது. ஆச்சர்யங்களை நோக்கிய பயணங்கள் தொடரும்... அன்புடன் ஆரோ.செல்வா... Aro Selvaa Ride @top fans | Aro Selvaa Ride

