
தோழர் நித்திஸ் ☭ on Instagram: "திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோட்டத்திற்கு உட்பட்ட கோட்டூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தில் சாதியத் தீண்டாமை தலைவிரித்தாடுகின்றது. ரெங்கநாதபுரத்திலுள்ள காளியம்மன் கோவில் இடைநிலைச் சாதிகளின் பிடியில் இருப்பதால், திருவிழாவின் போது நடைபெறும் சாமி ஊர்வலம் பட்டியலின மக்கள் வசிக்கும் தெருவுக்குள் செல்வதில்லை. பட்டியலின மக்கள் தங்கள் தெருவுக்குள்ளும், சாமி ஊர்வலம் வர வேண்டும் எனக் கேட்டதால், கடந்த 2019ஆம் ஆண்டு, மிகப் பெரிய சாதிய மோதல் அரங்கேறியது. இப்படியான சாதிய ஒடுக்குதல்களை எதிர்கொண்டாலும், பொருளாதார ரீதியாக ஆதிக்கச் சாதியினரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையே அங்கு நீடிக்கிறது. தங்களின் அடுத்த தலைமுறையினர் சாதியத் தீண்டாமை என்னும் பிடியில் சிக்கி விடக் கூடாது என்பதற்காக அவர்களைப் படிக்க வைக்கத் தொடர்ந்து போராடி வருவதாகக் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். Follow @thozhar_nithi_ma @mkstalin @udhay_stalin #thiruvarur #equality #genderequality #c"

