ShareChat
click to see wallet page
search
"மகளிர் உதவித்தொகை இனி ரூபாய் 2000" அல்லது "மூன்று மாதங்களில் கஞ்சா ஒழிக்கப்படும்" - எந்த வாக்குறுதி மக்களை கவரும்?! செய்தி ஊடகங்கள் ஒரு பட்சமாக உள்ளனவா என்று தெரியவில்லை; ஆனால், திமுக அரசுக்கு எதிராக ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் முன் வைக்கப் படுகின்றன - "கஞ்சா புழக்கம் எளிதாகி விட்டது", "பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாகி விட்டது", "நடுரோட்டில் வெட்டி கொலை என்று வன்முறை கொலை செய்திகள் அதிகமாகி விட்டது", "அடித்தர மக்கள் பிரச்சினைகள் புறக்கணிக்கப் படுகிறது" என்று தினமும் ஊடகங்களில் செய்திகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் வருகின்றன. இவற்றில் எதற்கும் திமுக / ஸ்டாலின் பதிலளிப்பது போல் தெரியவில்லை. இவை உண்மையல்ல என்று நினைக்கிறாரா அல்லது பதில் சொல்ல தேவையில்லை, மகளிர் உதவித்தொகை போதும் என்று நினைக்கிறாரா என்று தெரியவில்லை!! 😄 இவை உண்மையா என்று எனக்கும் தெரியவில்லை; இந்த நாட்டின் ஜனநாயகத்தில் "ஏப்ரல் 23 மக்கள் தீர்ப்பு" இந்த விஷயத்தில் உண்மையை அறிவிப்பதாக ஏற்றுக் கொள்ளலாமா என்றும் தெரியவில்லை!! 😄 ************************************************* ஆன்மீகத்தில் (spiritual invisible entity) யாரோ அதிமுக ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்!! ஒரு கவுண்டமணி செந்தில் ஜோக் ஞாபகமிருக்கிறதா?! பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் கவுண்டமணி ஒரு முறை கடுப்பில் பாத்திரம் கொண்டு வந்தவருக்கே ஈயம் பூசி விடுவார்!😄. அது போல் ஆயிரம் கோவில்களுக்கு பிளீச்சிங் செய்யும் போது "ஒரு கடவுளுக்கும்" சேர்த்து பிளீச்சிங் செய்து விட்டார்கள் போலிருக்கிறது!! 😄😄😂 அதனால் இருக்கலாமோ?!! ஆனால், இது ஆன்மீகம் சார்ந்த பிரச்சினை; நாத்திகத்தில் உருவான திமுக போன்ற கட்சிகள் இதற்கு என்ன செய்ய முடியும்? என்பதும் சரியான வாதம் தான்!! ஆனால், நாம் பிஜேபி வந்தால் கோவில்கள் தனியார் மயமாகக் கூடும் என்று நினைத்தால், இப்போதே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அவை இல்லை என்று சிலர் கூறுகிறார்கள்!! ஆனால் கோவிலை தான் அறநிலையத்துறை நிர்வாகிக்க முடியும்; கடவுள் யார் கட்டுபாட்டிலோ!! ************************************************. ஆன்மீக வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு அரசியல் பிரச்சனையை தரும்; அவர்கள் எல்லாவற்றிலும் நடுநிலையாக இருக்க வேண்டும்; ஆனால், நல்லதற்கும், கெட்டதற்கும் இடையே நடுநிலை கூடாது என்பது என் கொள்கை. ஆகையால், இப்படி வேண்டுவோம் - "ஈஸ்வரா, இறைவா, யார் ஆட்சிக்கு வந்தால் நாடும், சமுதாயமும், ஆன்மீகமும் செழிக்குமோ, நல்லது நடக்குமோ, அவர்கள் ஆட்சிக்கு வரட்டும்"!! ************************************************ #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
ஆன்மீக வாழ்க்கை - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - ShareChat