
தூத்துக்குடி சிப்காட் மதுரை பைபாஸ் சாலையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய திடீர் வாகன சோதனையில், லாரியில் கடத்தி வரப்பட்ட ₹8 கோடி மதிப்பிலான கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மாவட்ட காவல் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

