🧡🧡
நிறைந்து ததும்பும்
உன்னழகிலே
நிலை குலைந்து போகிறேன்
தேனாற்றின் கரையென
இதழிரண்டில்
தத்தளிக்கிறேன்
ஆகாயதமரையின்
தண்டென
நீள் கழுத்தில்
நீந்த துடிக்கிறதே
என் இதழ்கள்
திரை மூடா மார்பினில்
திணறும் என் ஆசைகளை
தீரா தாகம் கொண்டே
திகைத்து பார்க்கிறேன் பெண்ணே.... #காதல்

