#🧓பிரதமர் மோடி தொகுதி வரையறை பற்றிய விரிவான விளக்கம் கேட்பவர்களு க்காக, இதோ !
இந்தத் தொகுதி மறுவரையறைத் திட்டம் முழுக்க முழுக்க மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டது.
குடும்பக் கட்டுப்பாட்டைக் கடுமையாகப் பின்பற்றி, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்னிந்தியா, நாடாளுமன்றத்தில் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்களின் எண்ணிக்கையில் பேரிழப்பைச் சந்திக்கும்.
ஆந்திரப் பிரதேசம் 9 இடங்களை இழக்க உள்ளது (முன்பு 39 இடங்களுக்குப் பதிலாக, இப்போது 30 இடங்கள் மட்டுமே இருக்கும்).
தெலங்கானா 2 இடங்களை இழக்க உள்ளது (முன்பு 27 இடங்களுக்குப் பதிலாக, இப்போது 25 இடங்கள் மட்டுமே கிடைக்கும்).
கர்நாடகா 3 இடங்களை இழக்க உள்ளது (முன்பு 44 இடங்களுக்குப் பதிலாக, இப்போது 41 இடங்கள் மட்டுமே கிடைக்கும்).
கேரளா 11 இடங்களை இழக்க உள்ளது (முன்பு 31 இடங்களுக்குப் பதிலாக, இப்போது 20 இடங்கள் மட்டுமே கிடைக்கும்).
தமிழ்நாடு 12 இடங்களை இழக்க உள்ளது (முன்பு 69 இடங்களுக்குப் பதிலாக, இப்போது 49 இடங்கள் மட்டுமே கிடைக்கும்).
மொத்தத்தில், தென்னிந்தியா 37 எம்.பி. இடங்களை இழக்கப் போகிறது!!! இது ஒரு மிகப்பெரிய எண்ணிக்கை.
அதே நேரத்தில் -
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டைப் புறக்கணித்து, காவி கட்சியின் விருப்பமான இடமாக விளங்கும் உத்தரப் பிரதேசத்தில், தற்போதைய 80 இடங்கள் 143 ஆக உயரும்!!!
பீகாரிலும் தற்போதைய 40 இடங்கள் 79 ஆக உயரும்!!
மத்தியப் பிரதேசத்தில் 29 இடங்கள் 52 ஆக உயரும்!!
விகிதாசார அடிப்படையில் திருத்தங்களைச் செய்வதற்குப் பதிலாக, அவர்கள் அதை மக்கள் தொகைக்கு ஏற்ப செய்கிறார்கள். விகிதாச்சார முறையில் சீரமைப்பு வரையறை செய்யும் நோக்கமே இந்த அரசுக்கு இல்லை.
இத்தகைய அடாவடி வலிமையுடன் அரசியல் அதிகாரத்துடன் வட இந்தியா, இனி தென் இந்தியாவை ஆட்டிப்படைக்கும்.
இந்த மசோதா நிறைவேறினால் அதன் பிறகு நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டால், அவர்களுக்கு தென் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் கூடத் தேவையில்லை. வட இந்தியப் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டுமே போதுமானதாக இருக்கும்.
இதற்கிடையில், தென் இந்தியா கடுமையாக உழைத்து அனைத்து வரிகளையும் செலுத்தும்! நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 31 சதவீதப் பங்களிப்பை நாம் அளிக்கிறோம், நமது தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விட 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது..!!!
தற்போது நாம் வரியாகச் செலுத்தும் 100 ரூபாயில், வளர்ச்சித் திட்டங்களுக்காக (மெட்ரோ, நீர் திட்டங்கள் அல்லது ரயில்வே போன்றவை) வெறும் முப்பது ரூபாய் மட்டுமே திரும்பப் பெறுகிறோம். மீதமுள்ள 70 ரூபாய் வடக்கிற்குச் செல்கிறது.
நாளை, வடக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து, தென்னிந்தியாவிற்கு 30 ரூபாயைத் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை, ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் ஒரு ரூபாய் கொடுத்தாலே போதும் என்று வாக்களிப்பார்கள் - அதுவே சட்டமாகிவிடும்!
நம்மில் யாரும் எதுவும் சொல்ல முடியாது.
நாம் அடிப்படையில் வடக்கின் ஒரு காலனி பிரதேசமாகிவிடுவோம். நாம் அடிமைப்ப்பட்டுக் கிடந்த போது, ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து வரிகளை வசூலித்து எல்லாவற்றையும் அவர்கள் நாட்டிற்கு எடுத்துச் சென்றது போல, இனிமேல் தென்னிந்தியாவிற்கும் அதுவே நடக்கும்!
நாடு நலம் பெற, வளம் பெற அரசின் குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தை விரும்பி ஏற்றுக் கொண்டது தவறா? திட்டத்தை, சட்டத்தை மீறுபவர்களுக்கு பரிசாக ஆதிக்கத்தை வழங்குவதா,?
ஆகவே, உங்கள் குரலை எழுப்புங்கள்!
இந்த அடக்குமுறைத் தொகுதி மறுவரையறையை எதிர்ப்போம்!
1971 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படியான வரையறை தான் என்றென்றும் தொடரவேண்டும். #மூதிகள் #நரசங்கிகள் நாரசங்கிகள் சாணிஉருண்டைகள்


