ShareChat
click to see wallet page
search
'உடுமலைப்பேட்டையில் செயல்பாட்டில் உள்ள PM SHRI பள்ளி' எனப் பரவும் தவறான செய்தி! உடுமலைப்பேட்டையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி என்பது ஒன்றிய அரசின் "Kendriya Vidyalaya Sangathan" கீழ் செயல்படும் CBSE பள்ளி. இது PM SHRI திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட பள்ளி அல்ல. PM SHRI (PM Schools for Rising India) திட்டம் என்பது ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் பள்ளிகளை மேம்படுத்தும் திட்டம். PM SHRI என்ற பெயரில் புதிய பள்ளிகளைத் தொடங்குவது இதன் நோக்கம் அல்ல. மேலும் 'PM SHRI' திட்டம் தொடங்கப்பட்ட நாள் - 7 செப்டம்பர் 2022. ஆனால் உடுமலைப்பேட்டையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி 2019 ஆம் ஆண்டே தொடங்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உடுமலைப்பேட்டையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் பெயரில் பிஎம்ஸ்ரீ என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், இது PM SHRI (PM Schools for Rising India) திட்டம் மூலம் உருவாக்கப்பட்ட பள்ளி என்று கூறி தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர். Proof: https://udumalpet.kvs.ac.in/en/ https://dsel.education.gov.in/en/pm-shri-schools #youturn
youturn - ShareChat