#💪தி.மு.க #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #🔷காங்கிரஸ் #🤪தேர்தல் களம் மீம்ஸ்😁 *ஆர்.கே. நகரில் அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷுக்கு நெற்பயிர் கிரீடம் சூட்டி உற்சாக வரவேற்பு:*
*"போதையில்லா தமிழகம் படைக்க" பெண் குழந்தைகள் உருக்கமான வேண்டுகோள்!*
சென்னை, ஏப்.19:
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ், இன்று தொகுதியின் 41-வது மத்திய வட்டத்தில் உள்ள
நேரு நகர், காந்தி தெரு, கஸ்தூரிபா தெரு, பார்த்தசாரதி தெரு, ராமசாமி தெரு, மாரிமுத்து தெரு மற்றும் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் ஆகிய பகுதிகளில் வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த தெலுங்கு பேசும் மக்கள் மற்றும் பல்வேறு சமுதாயத்தினர் திரண்டு வந்து அ.தி.மு.க ஆட்சிக்குத் தங்கள் ஆதரவுக்கரத்தை நீட்டினர்.
பிரச்சாரத்தின் போது, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கைகளில் பதாகைகளை ஏந்தி வேட்பாளரைச் சந்தித்தனர். அதில், "2026-ல் அ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதும் கஞ்சா மற்றும் போதையில்லா தமிழகத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. சிறுமிகளின் இந்த உருக்கமான வேண்டுகோளைக் கண்டு வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ் மற்றும் கட்சியினர் நெகிழ்ச்சி அடைந்தனர். மேலும்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், நெற்பயிர்களுக்குரிய சமநிலைகளை (விலை மற்றும் பாதுகாப்பு) ஏற்படுத்தவும் அ.தி.மு.க பாடுபடும் என்பதை வலியுறுத்தி, வாக்காளர்கள் வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷுக்கு தலையில் நெற்பயிரிலான கிரீடம் சூட்டி அழகு பார்த்தனர். மேலும், அவருக்கு வெட்டிவேர் மாலை அணிவித்து, மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.
பிரச்சாரத்தில் பகுதி செயலாளர் ஆர்.
நித்தியானந்தம், எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணை செயலாளர் பி.வெங்கடேசன், கழக பொதுக்குழு உறுப்பினர் ஐயப்பா எஸ். வெங்கடேசன், மரக்கடை விஜி,
நரேஷ்குமார், பி.கோவிந்தராஜ், எஸ்.சுயம்பு, செல்குமார், பாசறை.பாபு, பல்லவன் பாபு, ரேவதி, பரணிகுருக்கள், தெலுங்கர் சங்க நிர்வாகிகள் மற்றும் பகுதி வட்ட பிற அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.


