k.R
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #😎வரலாற்றில் இன்று📰 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #தியானம் #யோகா
தியானத்திற்கு தடை நம்முடைய மனமே❤️🙏❤️
தியானத்திற்கு
தடை மனமே.
ஓஷோ...
நீங்கள் கண்களை மூடி தியானம் செய்ய ஆரம்பித்தீர்கள் என்றால்,
சிறிது நேரத்தில் சோர்வு வரும், சலிப்பு வரும்
உடனே கண்ணை திறக்க வேண்டும் என்கிற ஆர்வம்வரும்
உங்களால் சிறுது நேரம் கூட கண்ணை மூடி உட்கார முடியாது
காரணம் என்ன....???
நீங்கள் தியானம் செய்ய ஆரம்பிக்கும் கணம்
மனம் மரிக்கும் கணம் ஆரம்பமாகி விடுகிறது
தான் மரிக்காமல் இருக்க
அது பல வித்தைகளை,
பல காரணங்களை எழுப்பி
உங்களை தியானம்
செய்ய விடாது.
நீங்களும் தியானம் செய்ய முடியவில்லை
தியானத்தில் உட்கார்ந்தால் தான் சோர்வு, சலிப்பு, வருகிறது என்று நினைத்து எழுந்து விடுவீர்கள்
இவையெல்லாம் மனம்
தான் மரிக்காமல் இருக்க
செய்யும் அதன் தந்திரம்.
இந்த மனதின் தந்திரத்திலேயே பலர் வீழ்ந்து விடுகின்றனர்.
இதிலேயேதான்
பெரும்பாலனோர் தியானம் அமைகிறது.
இந்த நிலையில் நான் தினமும் தியானம் செய்தும், எனக்கு நிம்மதி, மகிழ்ச்சி இல்லை என்று நினைக்கின்றனர்
இந்த மனதை தாண்டாமல் நீங்கள் என்ன செய்தாலும் அதுதியானமே ஆகாது
மனம் செய்யும் வித்தைகளை எல்லாம்
நீங்கள் வெறுமனே கவனித்துக் கொண்டே இருந்தால்....
மனம் அடங்கி விடும்.
உங்களுக்கு ஒரு நல்ல சேவகனாக மனம் மாறிவிடும்
இப்போது மனம் மூலம் செயல்படும் தியானத்திற்கு பிறகு,
நீங்கள் மனதை ஒரு கருவியாக செயல்படுத்துவீர்கள்.
அப்போது உங்களுக்குள் இது நாள் வரை இருந்த, துயரம், துக்கம், மன அழுத்தம், போர் தன்மை, சலிப்புஎல்லாம் ஆவியாக
மறைந்து விடும்.
கொண்டாட்டம், ஆனந்தம் என்கிற வார்த்தையின்உண்மையான பொருள் அப்போது புரிய வரும்.
நீங்கள் தியானம் செய்பவராக இருந்தால்
நீங்கள் எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும்
உங்களுக்கு வாழ்வே மகிழ்ச்சிகரமாக, ஆனந்தகரமாககொண்டாட்டமாக இருக்கும்.
🙏🙏🙏🙏❤️❣️K.R❤️❣️🙏🙏🙏🙏
*ஓஷோ.✍🏼🌹*