🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣
*திருமுறை ஓதுவோம்*
*தீதின்றி வாழ்வோம்*
🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠
*_🌷சிவ வணக்கம்🌷_*
*🌷சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அதிற்சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லெனும் நான்மறைச் செம்பொருள் வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும் உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றாள் எம் உயிர்த் துணையே.*
🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷
*🌷சிவன் துதி🌷*
*🌷ஆழிசூழ் வையத்தை ஆண்டருளும் ஆதியனே !!*
*🌷காழிவாழ் சம்பந்தன் கைதொழும் வேதியனே !!*
*🌷வீழிமிழலை மேவும் வித்தக வேந்தே !!*
*🌷நீ வாழியென் பார்க்கருள வா !!*
🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷
*_சமய குரவர்கள் துதி_*
*🌷பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி !!*
*🌷ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி !!*
*🌷வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி !!*
*🌷ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி போற்றி !!*
🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷
*_திருஞானசம்பந்தர் சுவாமிகள்_*
*🌷பண்டை வல் வினையினால் பாய் உடுத்து உழல் குண்டரை வென்று முன் கூடல் வைகியே வெண் திரு நீற்று ஒளி விளங்கச் செய்திடும் தண் தமிழ் விரகன் மெய்த்தாள்கள் போற்றுவாம்.*
*_திருநாவுக்கரசு சுவாமிகள்_*
*🌷பொய் உரை நூல் சில புகலும் தீ யமண் கையர்கள் பிணித்து முன் கடல் அகத்து இடு வெய்ய கல் தோணியாய் மிதப்ப மேல் படு துய்ய சொல் அரசர் தாள் தொழுது போற்றுவாம்.*
*_சுந்தரமூர்த்தி சுவாமிகள்_*
*🌷வறந்திடு பொய்கை முன் நிரம்ப மற்று அவண் உறைந்திடும் முதலை வந்து உதிப்ப வன்னதால் இறந்திடும் மகன் வளர்ந்து எய்தப் பாடல் ஒன்று அறைந்திடும் சுந்தரன் அடிகள் போற்றுவாம்.*
*_மாணிக்கவாசகர் சுவாமிகள்_*
*🌷கந்தம் ஒடு உயிர் படும் கண பங்கம் எனச் சிந்தை கொள் சாக்கியர் தியங்க மூகராய் முந்து ஒரு மூகையை மொழிவித்து எந்தைபால் வந்திடும் அடிகளை வணக்கம் செய்குவாம்.*
*_🌷அரகர சிவசிவ🌷_*
*_🌷அரகர சிவசிவ🌷_*
*_🌷அரகர சிவசிவ🌷_* #🙏ஆன்மீகம்


