சிவ சிந்தனை...
1)விளைவை அறிந்து கர்மத்தை செய்...
2)கர்மத்தை செய்த பின் விளைவை சுமக்காதே...
3)உனது எல்லா செயல்களுக்கும் நீயே காரணம்...
பிறர் மீது பழி சுமத்தாதே...
4)பழி சொல்லும் அளவிற்கு கர்மம் செய்யாதே...
பாவத்திற்கு அஞ்சி நட...
5)கடவுளிடம் நேர்மையாக நட...
மனிதனிடம் நாணயமாக நட...
குடும்பத்தினரிடம் உண்மையாக நட....
6)பொய் உண்மைக்காக பேசு...
உண்மையாக பொய் பேசாதே...
7)நிதானம் தவறி செயல்படாதே...
8)பிறரை எள்ளி நகைக்காதே...
எள்ளளவும் பிறரது நகைப்புக்கு ஆளாகிவிடாதே...
9)பகை கொள்ளாதே...
சூழ்ச்சியை கற்று கொள்...
யாருக்கும் வீழ்ச்சியை ஏற்படுத்தி விடாதே...
10)சூழ இருக்கும் ஆபத்தில்
உன்னை காப்பாற்றி கொள்...
11)முடிந்தால் உதவு...முடியாவிட்டால்...உதவுபவர்களுடன் இணைந்து உதவி செய்....
12)விமர்சனங்களை விதையாக ஏற்றுக்கொள்...
அதில் சாதனையை அறுவடை செய்...
13)ஆண்டவனை நம்பு...முயற்சியை நீ செய்...
14)தொட்டதெல்லாம் வெற்றியாக
வெற்றியளிக்காத ஒன்றை தொடாதே....
15)இறைவனோடு இணைந்திரு....
அவர் தொடர்பு துண்டிக்க கூடிய
இடத்திற்கு செல்லாதே...
அவர் எந்த நேரம் வேண்டுமானாலும் உன்னை தொடர்பு கொள்ளலாம்...
எனவே உயர்ந்திரு... உயரத்தில் பறந்திரு.
நல்லது.
வாழ்த்துக்கள். #🙏ஆன்மீகம்


